பெரம்பலூர், நவ.4- இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற திட்டத் தினை சென்னையில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் இதன் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பெரம்ப லூர் மாவட்டத்தில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின் மூலம் 8 கி.மீட்டர் நடைபயிற்சி நிகழ்வை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதுக்கோட்டை ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நடைபயிற்சியினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் ஆகியோர் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த னர். மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா முன்னிலை வகித்தார். திருச்சிராப்பள்ளி திருச்சியில் சுகாதாரத்துறை சார்பில் சனிக்கிழமை திருச்சி உழவு சந்தை அண்ணாநகர் அறிவியல் பூங்காவில் இருந்து மாவட்ட ஆட்சி யர் பிரதீப் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி யில் மாநகர மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தி நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் ‘நடப் போம் நலம் பெறுவோம்’ திட்டத் தினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சனிக்கிழமை கொடிய சைத்து துவக்கி வைத்தார். சட்ட மன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.