தஞ்சாவூர், செப்.3- உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியாதான் முதலி டம் வகிக்கிறது என தென்னை வளர்ச்சி வாரியத்தின் சென்னை மண்டல இயக்குநர் இ.அறவாழி தெரிவித்தார். உலக தேங்காய் தினத்தை முன் னிட்டு, தஞ்சாவூர் அருகே ஈச்சங் கோட்டையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சனிக் கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் புலத் தலைவர் ஏ.வேலாயுதம் தலைமை வகித்தார். தென்னை வளர்ச்சி வாரியத்தின் உறுப்பி னர் பண்ணைவயல் ஆர்.இளங் கோ, தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் என்.கே.நல்ல முத்து ராஜா, துணை இயக்குநர் எஸ்.ஈஸ்வர், தேசிய உணவுப் பதன கழக நிறுவனத்தின் புலத் தலைவர் என்.வெங்கடாஜலபதி, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பேராசிரியர் ஆர்.அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கல்லூரி பேராசிரியர் கே.ஆர். ஜெகன்மோகன் நன்றி தெரிவித் தார். கருத்தரங்கில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் சென்னை மண்டல இயக்குநர் இ.அறவாளி பேசியதாவது: தென்னை, முதலில் இந்தோ னேஷியா நாட்டில் பயிரிடப்பட்டது. தற்போது உலகில் 16 நாடுகளில் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அதிக பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டாலும், இந்தியாவில்தான் தேங்காய் உற் பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் உலக அளவில் இந்தியா தான் தேங்காய் உற்பத்தியில் முத லிடம் வகிக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை, தென் மாநிலங்களில் அதிகள வில் தென்னை சாகுபடி செய்யப் பட்டாலும், தமிழகத்தில் அதிகள வில் தேங்காய் உற்பத்தி செய்யப் படுகிறது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 57 ஆயிரம் ஹெக் டேரில் தென்னை சாகுபடி செய்யப் பட்டு வருகிறது. இதில் கஜா புய லுக்கு பிறகு தென்னை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. தென்னை சாகுபடியை ஊக்கு விக்க விவசாயிகளுக்கு தென்னை வளர்ச்சி வாரியம் பல்வேறு உதவி களை, மாநில அரசு மூலமாக வழங்கி வருகிறது. தற்போது தேங் காய்க்கு உரிய விலை கிடைக்க வில்லை என விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் தேங்காயை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றி அதனை விற்க பல வழிகளிலும் விவ சாயிகளுக்கு பயிற்சிகள், ஆலோச னைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் தேங்காய் எண் ணெயின் பயன்பாடு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு குறை வாக உள்ளது.
உலக அளவில் தேங்காய் உற்பத்தியில், இந்தியா முதலிடம் வகித்தாலும், அதன் பயன்பாடு குறைவாகத்தான் உள்ளது. அதே நேரத்தில், இந்திய தேங்காய் வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்படுகிறது. நெல் சாகுபடியை காட்டிலும் தென்னை சாகுபடியில் தற்போது விவசாயிகள் அதிக அளவில் ஈடு பட்டு வருகின்றனர். ஆனால் விவ சாயிகள் அடர் நடவு முறையை பின்பற்றாமல் 25 அடி இடைவெளி யில் நடவு செய்தால் தென்னை மரம் நன்றாக வளர்ந்து, அதிக மகசூல் கொடுக்கும். தேங்காயை மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்ற விவசாயிகள் உழவர் உற்பத்தி நிறுவனம் மூலம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட் டால், தென்னை வளர்ச்சி வாரியம் அனைத்து உதவிகளையும் செய்யும். தென்னை பயிர் காப்பீடு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும். இதில் தென்னை வளர்ச்சி வாரி யம் 50 சதவீதமும், மாநில அரசும், விவசாயியும் தலா 25 சதவீதமும் பங்கீட்டு முறையில் காப்பீடு செலுத் தினால், மரங்கள் எதிர்பாராதவித மாக சேதமடையும் போது, இந்த காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இதில் தென்னை விவசாயி கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.