districts

img

இந்திய பாரா விளையாட்டுப் போட்டி: மயிலாடுதுறையில் விழிப்புணர்வு கூட்டம்

மயிலாடுதுறை, டிச.11 - கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் புதுதில்லியில் டிசம்பர் 17  அன்று நடைபெறுகிறது.  இப்போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ள னர். இதில், மயிலாடுதுறை மாவட்டத் தின் சார்பில் தடகள வீரர் கலைச் செல்வன் பங்கேற்க உள்ளார்.  இப்போட்டி குறித்து மயிலாடு துறை மாவட்டத்தைச் சேர்ந்த விளை யாட்டு வீரர்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில், மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) பயிற்சி மையத்தில் ஞாயி றன்று விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.  இதில், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ குமார், மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் மீனா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத் தில், சாய் கபாடி பயிற்சி வீரர்களுக்கான சீருடையை இந்திய விளையாட்டு ஆணைய மண்டல தலைவர் கிஷோர்  அறிமுகப்படுத்தினார். தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழக தலைவர்  சோலை எம்.ராஜா, மாவட்ட விளை யாட்டு அலுவலர் அப்துல்லாஷா, மயி லாடுதுறை மாவட்ட அமெச்சூர் கபாடி கழக தலைவர் மா.ரஜினி, சர்வதேச பாரா தடகள வீரர் கார்த்திக் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மயிலாடுதுறை சாய் கபாடி விளையாட்டு வீரர்களுக்கு, அவர் களுக்கான சீருடை அறிமுகப்படுத்தப் பட்டது. மாவட்ட அமெச்சூர் கபாடி  கழக தலைவர் மா.ரஜினி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.