districts

img

அரசுப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா

பொன்னமராவதி, ஜூன் 30 - பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க  விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி பொன்-புதுப் பட்டி அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா, சாதனை மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு தலை மையாசிரியர் நிர்மலா தலைமை வகித்தார்.  இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்க ளில் அகநானூறு, ஐங்குறுநூறு, பக்தி இலக்கியம், செம்மொழியான தமிழ் மொழி  நடனம், திருவிளையாடற்புராணம் நாடகம்,  இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் மாணவிகள் நிகழ்த்தி காட்டினர். கருத்த ரங்கத்தில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, பழமையும், புதுமையும் என தாய் தமிழ் மொழி யில் மாணவிகள் உரையாற்றினர்.