districts

img

திருக்களாச்சேரியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மயிலாடுதுறை, பிப்.18 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகேயுள்ள திருக்களாச்சேரி ஊராட்சியில்  நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு  விழா ஞாயிறன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் கா.மோகன் தலைமை வகித்தார். பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன், திருக்களாச்சேரி ஊராட்சிக்குட்பட்ட விவசாயிகள் பயன்பெ றும் வகையில் புதிய நேரடி நெல் கொள் முதல் நிலையத்தை திறந்து வைத்து பணி யைத் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர்கள் சம்சாத் ரபீக், பைலட், நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.