districts

img

சேதுபாவாசத்திரம் புதுப்பிக்கப்பட்ட மீன்பிடி இறங்குதளம் திறப்பு

தஞ்சாவூர், செப்.29 -  சேதுபாவாசத்திரத்தில் புதுப்பிக்கப்பட்ட மீன்பிடி  இறங்குதளம் திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், தஞ்சா வூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் மீனவ கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதுப் பிக்கப்பட்ட மீன்பிடி இறங்கு தளத்தை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயி லாக வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்தார்.  இதையொட்டி, சேது பாவாசத்திரத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பேரா வூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார் குத்துவிளக்கேற்றி, பெயர்ப் பலகையை திறந்து  வைத்தார்.  நிகழ்ச்சியில், நாகப்பட்டி னம் மண்டல மீன்வளத் துறை இணை இயக்குநர் இளம்வழுதி, நாகப்பட்டினம் மீன்வளத்துறை செயற் பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் மோகன் குமார், சேதுபாவாசத்திரம் மீன்வளத்துறை சார் ஆய்வாளர் ஜே.பியூலா, கட லோர காவல் படை உதவி ஆய்வாளர் நவநீதன், தலைமை காவலர் ராஜா,  திமுக தலைமை பொதுக் குழு உறுப்பினர் அ.அப்துல்  மஜீத், மீனவர் கிராம தலை வர்கள் கலந்து கொண்டனர்.