பெரம்பலூர், ஜூலை 25 -
பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் க.கற்பகத்திடம் திங்க ளன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில், “அரணாரை கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஓட்டு கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியா னது, தற்போது பழமை வாய்ந்த கட்டிடமாக உள்ளது. மேலும், 7 ஆசிரியர்கள், 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும் உள்ள இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் போதுமான தாக இல்லை.
மேற்கூரை ஓடுகள் சேதமடைந் திருப்பதால், மழைக் காலங்களில் நீர் ஒழுகுகிறது. இதனால் பெற் றோர்கள் அச்சத்துடன் குழந்தை களை பள்ளிக்கு அனுப்புகின்றனர். கல்விக்காக பல சிறப்பு திட்டங் களை செயல்படுத்தி வரும், தமிழக முதல்வரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று, பள்ளி யின் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள் ளனர்.