தஞ்சாவூர், ஆக.10 -
தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகத்திலி ருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை சார்பில் ரூபாய் 2.12 கோடி மதிப் பீட்டில், சுமார் 100 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப் பட்டுள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியினை வியாழக்கிழமை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், விடுதியைப் பார்வையிட்டு, விடுதியில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு இனிப்பு களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநாகராட்சி மேயர் சண். இராம நாதன், துணை மேயர் மரு. அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கோட்டாட்சியர்(பொ) பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.