districts

img

பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையம் மகளிர் சுய உதவி குழுவிடம் ஒப்படைப்பு

மயிலாடுதுறை, ஜன.13-  மயிலாடுதுறை மாவட்டம், செம்ப னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட முடிகண்டநல்லூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தூய்மை  பாரத இயக்கத்தின் கீழ் பிளாஸ்டிக் கழிவு களை மறுசுழற்சி செய்யும் மையம்  கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட் டது.  இம்மையத்தில் ஒன்றியத்துக்குட் பட்ட 57 ஊராட்சிகளில் இருந்து திடக்கழிவு  மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவு கள் பிரிக்கப்படும். பின்னர் அந்த பிளாஸ் டிக்  கழிவுகளை இயந்திரத்தில் அரைத்து  மறுசுழற்சி செய்து தார்சாலை அமைக் கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வரு கிறது. அதன்படி ஒரு மாதத்திற்கு ஒரு  டன் வரை பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி  செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகளிர்‌ திட்டத்திற்கு  மாற்றம் செய்து மறுசுழற்சி மையத்தை  மகளிர் சுயஉதவி குழுவிடம் ஒப்ப டைத்து மேலாண்மை செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டது. அதற்கான நிகழ்ச்சி முடிகண்டநல்லூரில் உள்ள மைய வளாகத்தில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை மாவட்ட த்துணை இயக்குனர் முருகண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட மகளிர் திட்ட  இயக்குநர் கவிதப்பிரியா, ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி  அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு பிளாஸ்டிக் கழிவுகள்  மறுசுழற்சி செய்யும் மையத்தை மகளிர்  சுயஉதவி குழுவிடம் ஒப்படைத்தார்.  தொடர்ந்து மயிலாடுதுறை மாவட் டத்தில் முதல் முறையாக பிளாஸ்டிக்  கழிவுகளை தரம் பிரித்து கொடுப்பவர்க ளுக்கு 1 கிலோவுக்கு ரூ.10 வழங்கும் திட்டத்தையும் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். அதன்படி பிளாஸ்டிக் பை, எண்ணெய் கவர், பால் கவர்,  மசாலா கவர் என 3 கிலோ பிளாஸ்டிக் கழிவு களை ஒப்படைத்த பெண்ணிற்கு ரூ.30 வழங்கி, அதனை பெற்று மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் கொடுத்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.  முன்னதாக எம்எல்ஏ, இயந்திரத் தின் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி செய்வதை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.