districts

திருச்சி முக்கிய செய்திகள்

குறைதீர் கூட்டம்  பிப்.29-க்கு மாற்றம்

தஞ்சாவூர், பிப்.18-  தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியர் தலைமை யில், மாற்றுத் திறனா ளிகளுக்கான மாவட்ட அளவிலான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பிப்.23 அன்று நடை பெற இருந்தது. இந்நிலை யில், நிர்வாக கார ணங்களுக்காக இக்கூட்டம் பிப்.29 (வியா ழக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு நடை பெறும். மாற்றுத்திற னாளிகள், தங்களது தேவைகளை கோரிக்கை  மனுவாக மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப்பிடம் வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பள்ளிக்  கட்டிடம் திறப்பு 

தஞ்சாவூர், பிப்.18-  தமிழ்நாடு அரசு சார்பில், சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பல்வேறு புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தார்.  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சியில் கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் வளா கத்தில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம் பாட்டுத் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குழந்தை நேயப் பள்ளி  உட்கட்டமைப்பு மேம் பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 29.32 லட்சம் மதிப்பீட் டில் இரண்டு வகுப்பறை  கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.  இதனை சட்டப் பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் திறந்து வைத்தார். பேராவூரணி ஒன்றியம், கூப்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.30.60 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டி டத்தையும் திறந்து வைத் தார்.

அடிக்கல் நாட்டு விழா

தஞ்சாவூர், பிப்.18-  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதுப் பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, ரூ.28.35 லட் சத்தில் புதிய கட்டடம்  கட்டவும், செருபாலக் காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 32.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டவும், அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.  பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி, பணிகளைத் துவக்கி  வைத்தார். சேதுபா வாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார்.  பாபநாசம் அய்யம்பேட்டையை அடுத்த சக்கராப் பள்ளி யில், மக்களவை உறுப் பினர் கல்யாணசுந்தரம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.4,50,000-இல் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  இதில், மக்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம், கும்பகோணம் மாநகர துணை மேயர் தமிழழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தம்பதிக்கு பாராட்டு 

தென்காசி, பிப்.18- தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த வர் குமார் . இவர் மற்றும்  இவரது மனைவி பிப்.15 அன்று இரவில் கடைக்குச் சென்று வீடு திரும்பும் வழி யில் சாலையோரம் 5 பவுன்  தாலி செயின் கீழே கிடந்த தைப் பார்த்தனர்.இதனை எடுத்து ஆய்க்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர். தம்பதியரின் இச் செயலை காவல்துறையினர் பாராட்டினர்.

பிப்.20 முதல்  முண்டந்துறையில் புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்

திருநெல்வேலி, பிப்.18- நெல்லை மாவட்டம்  களக்காடு முண்டந்துறை  காப்பகத்தில் ஆண்டு தோறும் பிப்ரவரியில் புலி கள் கணக்கெடுப்பு தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு பிப்ரவரி 20  ஆம் தேதி முதல் 27ஆம்  தேதி வரை களக்காடு  முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அம்பை, பாபநாசம், கடையம், முண்டந்துறை உள்ளிட்ட 4 வனச் சரகங்க ளில் புலிகள் கணக்கெடுப்பு தொடங்குகிறது.  இதனால் பிப்ரவரி 27  ஆம் தேதி வரை பாபநாசம்,  அகஸ்தியர் அருவி, மணி முத்தாறு அருவி ஆகிய  அருவிகளில் குளிப்பதற்கு அனுமதியில்லை. அது  போல் சுற்றுலா, கோயில், விடுதி ஆகியவற்றிற்கு செல் வதற்கும் தடை விதிக்கப்பட் டுள்ளது. பாபநாசம் வனச்  சோதனை சாவடி, மணி முத்தாறு வனச் சோதனை  சாவடிகள் மூடப்படுகின்றன.  பொதுமக்கள் ஒத்துழைக் குமாறு களக்காடு முண்டந் துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குநர் இளையராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

சிவகாசி அருகே தீண்டாமைச் சுவர்: அகற்றிட தீ.ஒ.முன்னணி வலியுறுத்தல்


சிவகாசி, பிப்.17- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே  தலித் மக்கள் பயன்படுத்தி வரும் சுடு காட்டை மறைத்து அரசு நிலத்தில் தீண்டா மைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. எனவே,  அதை உடனடியாக அகற்றிட வேண்டும் என  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு புகார்  மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மனுவில், ‘‘விருதுநகர் மாவட்டம் சிவ காசி வட்டம் விஸ்வநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது மாரியம்மன் கோவில் தெரு.  இங்கு 120 குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இவர்கள் அனைவரும் பட்டியலின அருந்ததியர் மக்கள் ஆவர். இந்த பகுதி வாழ் மக்களுக்கான சுடு காடு ஏற்கெனவே அரசு நிலத்தில் இருந்துள்  ளது. அதை புனரமைப்பு செய்யும் சிலர்  கொடுத்த நெருக்கடியால் வேறு இடத்திற்கு  மாற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது சிலர் அப்பகுதியின் நில  வரைபடத்தின் புள்ளிகளுக்கான எல்லை யை தவறாக வரைமுறை செய்து நீர் வழித்தடம் மற்றும் அதன் பாதையை ஆக்கி ரமித்து வேலி போட்டு கேட் அமைத்துள்ள னர். மேலும் முறையான அனுமதியின்றி அரசு நிலத்தில் பாலம் கட்டியுள்ளனர். இதை, வருவாய்த் துறை மற்றும் உள்  ளாட்சித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.  மேலும், அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 25 அடி உயரம் மற்றும் 150 அடி நீளம்  கொண்ட சுவரை கட்டியுள்ளனர். அருந்ததி யர் சமூக மக்கள் பயன்படுத்தி வரும் சுடு காட்டினை மறைத்து தீண்டாமை எண்ணத்  தில் இந்த தீண்டாமைச் சுவர் அமைக் கப்பட்டுள்ளது. எனவே, சட்டத்திற்கு புறம்பாக அரசு நிலத்தில் ஆக்கிரமித்து வேலி. கேட் அமைத்ததோடு, தீண்டாமைச் சுவர் அமைத்  ததை அகற்றிட வேண்டும்’’ என்று குறிப்பி டப்பட்டுள்ளது.

போலி பாஸ்போர்ட் வழக்கில் தேடப்பட்ட தலைமை காவலர் கைது  

தஞ்சாவூர், பிப்.18 -   இலங்கை தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கிய தலைமை காவலர் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் பகுதியில், இலங்கை தமி ழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம், பாஸ்போர்ட் பெற்று விநியோகம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் படி, க்யூ பிராஞ்ச் காவல் டி.எஸ்.பி. சிவ சங்கரன், ஆய்வாளர் பிரபாகரன் தலை மையிலான 10 பேர் கொண்ட குழு வினர் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், இலங்கை தமிழர் களுக்கு போலியாக ஆவணங்கள் தயாரித்து, அதை ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தும், உரிய காவல்துறை விசாரணை ஏதும் நடத்தாமல், அதற்கு  ஒப்புதல் வழங்கியும், பாஸ்போர்ட் அலு வலகத்தில் உள்ள சிலரின் துணை யோடு இந்திய அரசின் பாஸ்போர்ட் வழங்கியது தெரியவந்தது. இது தொடர்பாக நடத்திய விசார ணையில், குறிப்பிட்ட காவல் நிலைய காவலர்கள் முறையாக  விசாரணை நடத்தாமல் செயல்பட்டது  தெரிந்தது. மேலும், இதற்கு உடந்தை யாக சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள ஆண்டிக்காடு கிராம அஞ்சலக  ஊழியராக பணியாற்றிய கோவிந்த ராஜ் (64), கும்பகோணத்தை சேர்ந்த  வடிவேல் (52), ராஜூ(31), சேதுபாவா சத்திரம் காவல்நிலையத்தில் தற்காலிக  கணினி ஆபரேட்டராக இருந்த பால சிங்கம் (36), திருச்சி கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த வைத்திய நாதன் (52), ராஜமடத்தை சேர்ந்த சங்கர் (42) ஆகிய ஆறு பேரை கடந்தாண்டு  டிச.3 அன்று க்யூ பிராஞ்ச் காவல்துறை யினர் கைது செய்தனர்.  மேலும் இவ்வழக்கில் ஜன.31 அன்று, கும்பகோணம் பம்படையூரைச் சேர்ந்தவரான சங்கரனை (52)கைது  செய்தனர். இருப்பினும், இவ்வழக்கில்  முக்கிய நபரான சேதுபாவாசத்திரம் காவல்நிலைய எழுத்தர் சேஷா (47) பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலை யில், அவர் கைது செய்யப்படாமல் இருந்தார்.  உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் நடந்த நீதிபதி வழக்கு விசார ணையின்போது, “போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற விவகா ரத்தில், முக்கிய நபராக, உடந்தையாக  இருந்தது சேஷாதான். அவரை ஏன்  கைது செய்யவில்லை. உடனே கைது  செய்ய வேண்டும்” என கேள்வி எழுப்பி  னர். இதையறிந்த சேஷா தலைமறை வானார். அவரை க்யூ பிராஞ்ச் போலீ சார், கடந்த ஒரு மாதமாக தேடி வந்த னர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலை யத்தில் அவர் இருப்பதாக தகவல்  கிடைத்தது. அதன்பேரில், காவல்துறை யினர் அங்கு சென்று அவரை கைது  செய்து, பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறை யில் அடைத்தனர்.\

பணப் பலன்களை உடனே வழங்குக! கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்

பணப் பலன்களை உடனே வழங்குக! கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் தஞ்சாவூர், பிப்.18-  தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அருகே யுள்ள கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் அலுவலகம் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக் கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி ஆசிரி யர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த 143 பேர் கைது  செய்யப்பட்டனர். இதில், உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி  மேம்பாடு, பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.  பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி எம்.பில்., பி.எச்.டி. பட்டங்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.  புத்தொளி, புத்தாக்க பயிற்சிகளுக்கான கால நீட்டிப்பை வழங்க வேண்டும். இணைப் பேராசிரியர் பணி நிலையில் 3 ஆண்டுகள் நிறைவு பெற்று முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்கள் அனை வருக்கும் பேராசிரியர் பணி மேம்பாடு வழங்க வேண்டும். இணைப் பேராசிரியர் பணி மேம்பாட்டுக்கு முனைவர் பட்டம் நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.  அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு கணக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ்மொழித் தேர்வு தேர்ச்சியை ஏற்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு குழுவின் மாநிலப் பொதுச் செயலா ளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மாநிலப் பொருளா ளர் சேவியர் செல்வகுமார், தஞ்சாவூர் மண்டலப் பொதுச் செய லாளர் பிரகாஷ்ராஜ், செயலாளர் மகேந்திரன், பொருளாளர்  ரமேஷ் உள்பட தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடு துறை, சிவகங்கை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய  மாவட்டங்களைச் சேர்ந்த அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர். இதில், பங்கேற்ற 143 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர்.

மணமேல்குடியில் கடற்பசு பாதுகாப்பு  மேம்பாட்டு பயிற்சி

அறந்தாங்கி பிப்.18 - தமிழ்நாடு வனத்துறை சார்பில் புதுக்கோட்டை வனக்கோட்டம், அறந்தாங்கி வனச்சரகம் இணைந்து மணல்மேல்குடியில் கடற்பசு பாதுகாப்பு குறித்து துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும்  மேம்பாட்டு பயிற்சி நடத்தின.  இந்நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட வன அலு வலர் கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அறந் தாங்கி வனச்சரக அலுவலர் மணிவெங்கடேஷ், மீன்வளத் துறை சார் ஆய்வாளர் கனகராஜ், மணமேல்குடி காவல்  நிலைய உதவி ஆய்வாளர் முருகையன், அழகப்பா பல்கலைக்கழக கடலியல் துறை பரமசிவம், ஓம்கார் நிறுவன இயக்குநர் பாலாஜி, இந்திய வனவிலங்கு நிறுவ னத்தைச் சேர்ந்த ஸ்வேதா ஐயர் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். மணமேல்குடி ஊராட்சி மன்றத் தலைவர், புதுக்கோட்டை  மாவட்ட மீனவ கிராமங்களின் தலைவர்கள், மீனவ சங்க  பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்‌. நிகழ்ச்சியில் கடல் பசு மற்றும் கடல் தாழைகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றிற்கான அச்சுறுத்தல்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. பாக் ஜலசந்தியில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முதல் புதுக் கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் வரை உள்ள கடல்பகுதி, 2022 ஆம் ஆண்டு தமிழக அரசால் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வனத்துறையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர கிராமங்களுக்கு நேரில் சென்று, அழிந்து வரும் கடல் வாழ் உயிரினங்களான கடற்பசு, கடல் ஆமை, கடல் அட்டை மற்றும் பிற அரிய உயிரினங்களை அழிவிலிருந்து  பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

திருச்சியில் மருத்துவ முகாம், கருத்தரங்கம் 

திருச்சிராப்பள்ளி, பிப்.18 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருச்சி மண்டலம் தர கட்டுப்பாடு பணியாளர்கள் சங்கம் சார்பில்  மருத்துவ முகாம் மற்றும் கருத்தரங்கம் திருச்சி பிரீஸ் ஹோட்டலில் நடைபெற்றது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தரக்கட்டுப்பாடு பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில், பொதுச் செயலாளர் ரகுநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில துணைத்தலைவர் மணி கண்டன் வரவேற்றார். திருச்சி மண்டல மேலாளர் சிற்ற ரசு, பொது மேலாளர் இயக்கப் பணிகள் ஹரிகுமார் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். புனித வளனார் கல்லூரி  பேராசிரியர் ஜான்லவ் ஜாய் கருத்தரங்கில் சிறப்புரை யாற்றினார். திருச்சி மாருதி மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாமை, பொது மேலா ளர் ஹரிகுமார், மாநிலத் தலைவர் செந்தில், மண்டல மேலாளர் சிற்றரசு, மாநில துணைத்தலைவர் மணி கண்டன், டாக்டர் ரத்னா ஆகியோர் தொடங்கி வைத்த னர். தர கட்டுப்பாடு பணியாளர்கள் சங்க மாநில துணைத்  தலைவர் டாக்டர் வி.ஜி.மணிகண்டன் நினைவுப் பரிசு  வழங்கி பேசினார். தர கட்டுப்பாடு பணியாளர் சங்க  மாநிலப் பொருளாளர் ஆர்.கிருஷ்ணன் நன்றி கூறினார்.        

இதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவிக்கரம் நீட்டிய மெக்கானிக்குகள்

மயிலாடுதுறை, பிப்.18 - இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள மெக்கானிக் நண்ப ருக்கு, சக மெக்கானிக்குகள் ஒன்றுசேர்ந்து உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமத்தில் வசித்து வருபவர்  இருசக்கர வாகனம் பழுதுநீக்கம் செய்யும் (மெக்கானிக்) சரவணன். இவர் இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக  இருசக்கர வாகனம் பழுதுநீக்கம் செய்யும் தொழிலை, சிறிய கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து செய்து வந்தார்.  இந்நிலையில், திடீரென ஏற்பட்ட இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால்,  வருமானம் முற்றிலும் இல்லாமல் சரவணன் கடும் சிர மத்தில் இருப்பதை அறிந்த, மயிலாடுதுறை மாவட்டத் தில் உள்ள டூவீலர் மெக்கானிக்குகள் (பைக் டாக்டர் நல  அமைப்பு) ஒன்றுசேர்ந்து, மருத்துவச் செலவுக்கான உதவித் தொகையையும், வீட்டுத்தேவைக்கான மளிகைப்  பொருட்களையும், சரவணன் வீட்டுக்கு நேரில் சென்று வழங்கினர். சக நண்பர் நலிவுற்று இருப்பதை அறிந்து உதவி  செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்திரம்பட்டியில் கல்குவாரிகள் அமைக்க கூடாது!

கிராம மக்கள்  வலியுறுத்தல் பொன்னமராவதி, பிப்.18- ஆத்திரம்பட்டி கிராமத் தில் விதிகளை மீறி சட்ட  விரோதமாக கல்குவாரி களை இயக்கவும், புதிய  கல்குவாரி அமைக்கவும்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்  ளது. புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி அருகே  உள்ளது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஆத்திரம்பட்டி கிரா மம். இங்கு வெள்ளியன்று புதிய கல்குவாரி திறப்பதற் கான கருத்து கேட்பு கூட்டம்  நடைபெற்றது.  இதற்கு தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமை வகித்தார். மாவட்ட மாசுக் கட்டுப் பாட்டு வாரிய அலுவலர் பாண்டியராஜன் முன்னிலை  வகித்தார். அப்பகுதி பொது மக்கள் மற்றும் சட்டவிரோத கனிமக் கொள்ளைக்கு எதி ரான கூட்டமைப்பினர் பங் கேற்றனர்.  கூட்டத்தில், மேற்கண்ட கிராமத்ததில் புதிதாக அமைய இருக்கும் அமா வாசை கல்குவாரியின் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில், அரசு விதி கள் மற்றும் சிறுகனிம சலுகை விதிகளில், விதிமீறல் கள், வீடுகள், வீட்டுமனை கள், நிரந்தர கட்டுமானங் கள், ஊர்நத்தம் ஆகியவை 300 மீட்டர் சுற்றளவில் இல்லை என தவறான  தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தவ றான தகவல்களை அளித்து,  சட்ட விரோதமாக புதிய கல்  குவாரி அமைக்க கூடாது.  மேலும் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு விரோதமாக, 500 மீட்டர் சுற்ற ளவில் ஐந்து ஹெக்டேர் பரப்பளவிற்கு மேல் குவாரி இருந்தும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே, தற்போது அனுமதி கேட்கும் அமாவாசை கல்குவாரியை சுற்றி, 8.9.2020 இல் அனு மதி பெற்ற செல்வம் கல் குவாரி, 10.11.2020 இல் அனுமதி பெற்ற வைரவன் கல்குவாரி, 23.11.2021 இல்  அனுமதி பெற்ற அழகப்பன்  கல்குவாரி ஆகிய குவாரி களுக்கு அனுமதி அளிக்கப் பட்டு இயங்கி வருகிறது. இந்த 3 குவாரிகளின் அனு மதியை ரத்து செய்ய வேண் டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.