பாபநாசம், ஜன.20 - தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக் கான நிர்வாகம் மற்றும் தலைமைப் பண்பு தொ டர்பான பயிற்சி பெங்களூருவில் உள்ள ஐஐஎச்எஸ் நிறு வனம் சார்பில் நடந்தது. 5 நாள் நடந்த பயிற்சியில் தஞ்சா வூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், அய்யம் பேட்டையை அடுத்த கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இதை யொட்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த், ஊரக வளர்ச்சி உதவி இயக்கு நர் சங்கர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.