தஞ்சாவூர், ஜூலை 29- அகில உலக தாத்தா -பாட்டிகள் தினத்தை யொட்டி, தஞ்சாவூர் மாவட் டம் பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் புனித சவேரியார் ஆலயத்தில், அவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலயத்தில் காலை முதல் தியான வகுப்புகள் நடத்தப்பட்டு, மாலை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் அடி களார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அத னைத் தொடர்ந்து தாத்தா- பாட்டிகளுக்கு அவர்களது பேரன், பேத்திகள், குடும்ப உறுப்பினர்கள் பரிசு பொருட்களை வழங்கி அன்பை பரிமாறிக் கொண்ட னர். நிகழ்ச்சியில் தாத்தா-பாட்டிகள் அவரது குடும்ப உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.