பாபநாசம், ஜுன் 6-
மனிதநேய மக்கள் கட்சியின் தலை வரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரு மான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
சென்னையில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முத லீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முத லீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இந்த நிலையில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி. உதகமண்டலத்தில் நடை பெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசும்போது, “நாம் கேட்ப தாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களு டன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்பு களுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்” என்றெல்லாம் பேசி தமிழ்நாடு முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தைக் குறை கூறியுள்ளார்.
2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தபோது இந்தியா வில் முதலீடு செய்ய வருமாறு சர்வதேச முத லீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். புளூம் பெர்க் நகரில் உலக வர்த்தக மையக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவில் உலக முதலீட்டாளர்கள் அதிகளவு முதலீடு செய்ய வேண்டும். இதில் சிக்கல்கள் ஏதும் இருந்தால், அதைப் பாலமாக இருந்து நான் தீர்த்து வைப்பேன் என்றும் கூறினார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மீது வைத்த விமர்சனத்தை பிரதமர் மோடி மீதும் கவர்னர் வைப்பாரா? தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் மீது காழ்ப்பு ணர்வுடன் கருத்துக்களை தெரிவித்து வரும் கவர்னரின் பேச்சு கண்டனத்துக்குரியது.