தேனி, ஏப்.1- சொந்த மாவட்டத்தில் அரசியல் செய்து தேனியில் போட்டியிடாமல் ஓ. பன்னீர்செல்வம் இராமநாதபுரம் தொகு தியில் ஏன் போட்டியிட வேண்டும் என தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பி யுள்ளார். திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பெரி யகுளம் நகர் பகுதியில் வடகரை அரண் மனை தெருவில் தனது பிரச்சாரத்தை துவங்கி சௌராஷ்டிரா சத்திரம், பழைய பேருந்து நிலையம், தென்கரை, தேவர் சிலை, சங்கு ஊதும் இடம் உள்ளிட்ட 6 இடங்களில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘உங்க வீட்டு பிள்ளை உங்களுக்காக உழைக்கும் தங்க தமிழ்ச்செல்வன் நீங்க ஓட்டு போட்டால் உங்களுக்கு நல்லது செய்வேன். மூன்று முறை முத லமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல் வம் தேனி தொகுதியில் தான் போட்டி யிட்டு இருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் என்னுடன் இருக்கி றார்கள் என்று கூறினார். தற்போது தேனி மக்களை மறந்து இராமநாத புரத்தில் சென்று தேர்தலில் வேட்பாள ராக களம் இறங்கி இருக்கிறார். அவர் தேனி தொகுதியில் தான் போட்டியிட்டி ருக்க வேண்டும். தங்க தமிழ்ச்செல் வனை எதிர்த்து தான் போட்டியிட்டு இருக்க வேண்டும்’’ என்றார். வேட்பாளருடன் நகர்மன்றத் தலை வர் சுமிதா சிவக்குமார், மதிமுக மாவட் டச் செயலாளர் ராமகிருஷ்ணன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். ராமச்சந்திரன், சுப்பிரமணி, மன்னர் மன் னன், நகர் மன்ற உறுப்பினர் மதன் குமார் உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.