மாதர் சங்கத்தினர் மனு அரியலூர், ஜூன் 11- பொதுமக்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக் கள் மூலம் தொழில் கடன் கொடுக்க வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர். கடன் சுமையால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தொழில் கடன் கொடுத்து, பாதுகாக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் அம்பிகா தலைமையில், மாவட்டப் பொருளாளர் மலர்க்கொடி, மாவட்ட துணைச் செயலாளர் பாக்கியம், மாவட்ட துணைத் தலைவர் சிவ சங்கரி, மாவட்டக் குழு உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலையில் மனு அளிக்கப் பட்டது.