பெரம்பலூர், அக்.9 - மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை தொழிலாளியாக அங்கீகரித்து, பணி பாது காப்பை உறுதி செய்ய வேண்டும். ஊக்கத் தொகை என்பதை மாற்றி ஊதியமாக வழங்க வேண்டும். ஸ்கோரிங் முறையிலான ஊக்கத் தொகையினை ரத்து செய்ய வேண்டும். பேறு கால விடுப்பு, பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும். ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும். பணி நேரத்தை வரை யறை செய்ய வேண்டும். பணியிடத்தில் கண்ணியமாக நடத்த வேண்டும். கௌரவ மான பணிச் சூழலை உருவாக்க வேண்டும். மக்களைத் தேடி மருத்துவ தன்னார்வலர்களை சுகாதாரத் துறைகளில் கொண்டு வர வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26,000 என நிர்ணயம் செய்ய வேண்டும். கைப்பேசி, ரீசார்ஜ், சீருடை, அடையாள அட்டை, பயணப்படி வழங்க வேண்டும். தன்னார் வலர்கள் மீது ஆரம்ப சுகாதார நிலைய பணி களை திணிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலை வர் ஆர்.கொளஞ்சி தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் ஆர்.செல்வி, மாவட்டப் பொருளாளர் எஸ்.வேணி ஆகியோர் விளக்க வுரை ஆற்றினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் க.கற்பகத்திடம் கோரிக்கை மனுவை வழங்கினர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலை வர் எஸ்.வள்ளி தலைமை வகித்தார்.
சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் பி.சாய் சித்ரா ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். சிஐடியு மாவட்ட பொரு ளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட கூடுதல் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். திருச்சிராப்பள்ளி திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாநிலக் குழு உறுப்பினர் செல்வி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர் மணிமாறன், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் பழனிசாமி, மாவட்டத் தலைவர் பால்பாண்டி ஆகியோர் பேசினர். கரூர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் யாஸ்பின்பானு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மணிமேகலை வரவேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொரு ளாளர் மார்செலின்மேரி நன்றி கூறினார். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாக நுழைவாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.கீதா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. தங்கமணி, மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வனிதா, மாவட்டப் பொருளாளர் ஆர்.ராசாத்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.