districts

img

பேரளம் நகரச் செயலாளராக ஜி.செல்வம் தேர்வு

திருவாரூர், அக்.13 - பேரளம் நகரச் செய லாளராக ஜி.செல்வம் தேர்வு  செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளம்  நகர முதல் மாநாடு ஞாயி றன்று பேரளத்தில் நடை பெற்றது. மாநாட்டு செங்கொ டியை மூத்த தோழர் வி.கலிய பெருமாள் ஏற்றினார். மாநாட்டுக்கு ஜெ.மனோ கரன், எம்.ஜெயலட்சுமி ஆகி யோர் தலைமை வகித்தனர்.  சிபிஎம் செயற்குழு உறுப்பி னர் கே.ஜி.ரகுராமன் துவக்க உரையாற்றினார். 9 பேர் கொண்ட நகரக் குழு உறுப்பினர்கள் தேர்வு  செய்யப்பட்டு, ஒன்றியத்தின் புதிய செயலாளராக ஜி. செல்வம் தேர்வு செய்யப்பட் டார்.  புதிய நிர்வாகிகளை அறி வித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் நிறை வுரையாற்றினார். நூறு ஆண்டுகள் பழமை யான பேரளம் அரசு மருத் துவமனைக்கு மாற்றாக, மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில், அனைத்து நவீன வசதியுடன் புதிய அரசு  மருத்துவமனை அமைத்திட  வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை பேர ளம் பேரூராட்சிப் பகுதி களில் அமல்படுத்த வேண்டும். பேரளம் ரயில் நிலையத் தில் அனைத்து ரயில்களும்  நின்று சென்றிடவும், முன் பதிவு செய்யும் வசதியையும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.