“விடுதலைப்போராட்ட வீரர், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மகத்தான தலைவர், ‘தகைசால் தமிழர்’ தோழர் என். சங்க ரய்யா அவர்களின் மறைவுக்கு தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலை ஞர்கள் சங்கம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி செம் மலர் இலக்கிய ஏட்டினைத் தொடங்குவ தற்கு உந்துசக்தியாக இருந்தவர்க ளுள் தோழர் சங்கரய்யாவும் ஒருவர். செம்மலரில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் 34 பேர் 1974ஆம் ஆண்டு நவம்பர் 23, 24 தேதிகளில் மது ரையில் கூடி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்குவது என்று முடிவு செய்தனர். இந்தக் கூட் டத்தில், தமிழக பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் தோழர்கள் எம்.ஆர். வெங்கட்ராமன், ஏ. நல்லசிவன், கே. முத்தையா ஆகியோரோடு தோழர் என். சங்கரய்யாவும் பங்கேற்று முற்போக்கு எழுத்தாளர்களுக்கு என்ற ஓர் அமைப் பினை உருவாக்க வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்தார். 1975ஆம் ஆண்டு ஜூலை 12, 13 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற தமுஎச முதல் மாநாட்டில் பங்கேற்று தோழர் சங்கரய்யா வாழ்த்துரை வழங்கி னார். அப்போது அவர், “கடந்த காலத் தில் பல எழுத்தாளர் சங்கங்கள் அழிந் ததுபோல், இது அழிந்துவிடக்கூடாது என்று சிலர் கூறினார்கள். இது அப்படி அழியாது. ஏனென்றால், இதற்கு தெளி வான கொள்கை அடிப்படை உண்டு” என்று முழங்கினார்.
முதல் மாநாட்டில் அவர் கூறியதுபோல, தமுஎகச தமிழ கத்தின் மிகப்பெரும் கலை, இலக்கிய பண்பாட்டு அமைப்பாக உயர்ந் தோங்கி வளர்ந்து நிற்பது கண்டு அவர் பேருவகை கொண்டார். தமுஎகச நடத்திய பல்வேறு மாநில மாநாடுகளிலும், பயிலரங்குகளிலும் பங்கேற்று அவர் ஆற்றிய உரை தமுஎ கச வளர்ச்சிக்குத் தடம் வகுத்து கொடுத் தது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13, 14, 15 தேதிகளில் மார்த்தாண்டத்தில் நடை பெற்ற தமுஎகசவின் 15-வது மாநில மாநாட்டின் போது நாட்டு விடுதலை யின் பவள விழாவையும் இணைத்துக் கொண்டாடினோம். இந்த மாநாட்டில், ஆக.14 அன்று நள்ளிரவு 12 மணிக்கு மாநாட்டில் ஏற்றப்படும் தேசியக் கொடியை தோழர் சங்கரய்யா எடுத்துக் கொடுத்தார். அவரால் எடுத்தளிக்கப் பட்ட அந்தக் கொடியே தமிழகம் முழுவ தும் பயணித்து மாநாட்டில் ஏற்றப்பட் டது. இவ்வாறாக தமுஎகசவின் அனை த்து நிகழ்வுகளிலும் தம்மை அவர் நெருக்கமாக பிணைத்துக் கொண்டி ருந்தார். சங்ககால இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை ஆழ்ந்த வாசிப்பு கொண்டிருந்த அவர், முற் போக்கு படைப்பாளர்களின் படைப்பு களை உடனுக்குடன் படித்து அவர்க ளை உற்சாகப்படுத்தி வந்தார். தலை சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான அவர், தன்னுடைய உரைகள் அனைத் திலும் நம்பிக்கை விதைகளை விதை த்து வந்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட உருவாக் கத்தின் போது அவர் நிகழ்த்திய உரைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கித் தந்த ஆதி விதைகளில் ஒருவரான தோழர் சங்கரய்யாவுக்கு அமைப்பின் விழுதுகள் தமது வீரவணக்கத்தை தெரி வித்துக் கொள்கின்றன. சமநீதி, சமூக நீதி, படைப்பதற்கான பயணத்தில் தோழர் சங்கரய்யாவின் குரல் என் றென்றும் நம்மை வழிநடத்தும். தோழர் சங்கரய்யாவுக்கு வீரவணக்கம்.”
மாநிலத் தலைவர்
மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர்
ஆதவன் தீட்சண்யா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம்.