districts

img

காலநிலை மாற்றத்தால் முன்கூட்டியே குவியும் வெளிநாட்டு பறவைகள்

வேதாரண்யம், ஆக.30 - காலநிலை மாற்றத்தால், வெளிநாட்டுப் பறவைகள் முன்கூட்டியே கோடியக்கரை சர ணாலயத்திற்கு வந்துள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யத்தை அடுத்த கோடியக்கரையில் பறவை கள் சரணாலயம் அமைந்துள்ளது. ‘பறவை களின் நுழைவு வாயில்’ என்று அழைக்கப்ப டும் இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும்  அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான்,  இராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து சுமார் 200 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம். ஆர்டிக் பிரதேசத்தில் நிலவும் குளிரைப் போக்க அக்டோபர் மாத இறுதியில் கோடியக் கரை சரணாலயத்திற்கு வரவேண்டிய பறவைகள், தற்போதைய காலநிலை மாற்றத் தால் முன்கூட்டியே வந்து குவிந்துள்ளன. தற்போது சரணாலயத்திற்கு கூழைகிடா, பூநாரை, கடல் ஆலா, உள்ளான் வகை பறவைகள் வரத் துவங்கியுள்ளன. பறவைகள் சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து இரை தேடுவதையும், சிற கடித்து பறப்பதையும் பார்த்து மக்கள் ரசிக் கின்றனர். இந்த பறவைகளை இரட்டைத் தீவு,  கோவை தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதி களில் காலை-மாலை வேளைகளில் காண லாம். எதிர்வரும் நாட்களில், பல்வேறு நாடு களில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கோடியக் கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரி வித்தார்.