நாகப்பட்டினம், டிச.22 - கீழவெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, தியாகிகள் நினை விடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் தோழர் கள் மாற்றுப் பாதைகளில் வர வேண்டு மென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: கீழ்வேளூர் வெண்மணி சாலை யில், கடுவையாற்று பாலம் வேலை நடப் பதால், டிசம்பர் 25 அன்று கீழவெண்மணி தியாகிகள் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் தோழர்களின் போக்கு வரத்திற்கு இடையூறாக இருக்கும். எனவே வெளிமாவட்டத்தில் இருந்து வரும் தோழர்கள் மாற்றுப் பாதையை தேர்ந்தெ டுத்து வரவும். திருவாரூர் வழியாக வரும் தோழர்கள், வாலவாய்க்கால் ரவுண்டானா, மாவூர், மாங்குடி, ஆதமங்கலம், வழியாக வெண் மணிக்கு வரலாம். புதுக்கோட்டை, பட்டுக் கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக வரும் தோழர்கள் சீராவட்டம், திருக்கு வளை, சாட்டியக்குடி வழியாக வெண் மணிக்கு வரலாம். காரைக்கால், மேல வாஞ்சூர் வழியாக வரும் தோழர்கள் சிக்கல், ஆவராணி, புதுச்சேரி, வடுகச் சேரி, இருக்கை வழியாக வெண்மணிக்கு வரவும். தோழர்களுக்கு வழி பற்றிய சந்தேகம் இருப்பின், கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளவும். என்.எம்.அபுபக்கர் - 9943383974 (கீழ்வே ளூர் வடக்கு ஒன்றிய செயலாளர்), ஏ.சிவ குமார் - 9626549466 (மாவட்டக் குழு உறுப்பி னர்), டி.அருள்தாஸ் - 8754119991 (வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர்), ஆதி.உதய குமார் - 9003757531 (மாவட்ட நிருபர், தீக்கதிர்) இவ்வாறு அதில் கூறியுள்ளார்.