districts

img

பள்ளியில் கோள்கள் திருவிழா

தூத்துக்குடி , ஜன. 27- தமிழ்நாடு முழுவதும் 2024 இடங்களில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வானி யல் கருத்துக்களை பரப்பிட தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, கோள்கள் திருவிழாவை நடத்தி வருகிறது. கோவில்பட்டி அஸ்ட்ரோ  கிளப் சார்பில் ஊத்துப்பட்டி பள்ளியில் நடந்த  கோள்கள் திருவிழாவில் மாணவர்களி டையே வானியல் கருத்துக்களை பரப்பிட  டெலஸ்கோப் மூலம் தொலைதூரப் பொருட் களை பார்வையிட பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அஸ்ட்ரா னமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு  உறுப்பினர் முத்துசாமி தலைமை வகித்தார்.  தலைமையாசிரியர் ராஜமாணிக்கம், கோவில் பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன் கலந்து கொண்டு டெலஸ்கோப் பயிற்சியை துவக்கி வைத்தார்.