நோய், வறுமை காரணமாக தந்தை - மகள் தற்கொலை
மன்னார்குடி, நவ.16 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மந்தைக்காரத் தெருவில் ரா.அசோக்குமார் (62)-பரமேஸ்வரி (52) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு அபர்ணா என்ற அ.அருகநாதனி (25) என்ற மகள் இருந்தார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த நிலையில், அசோக்குமார் நீண்ட காலமாக சிறு நீரக நோயால் அவதிப்பட்டதால், அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே குடும்பத்தை மகள் அருக நாதனியின் வருமானத்தைக் கொண்டு நடத்த வேண்டி யிருந்தது. சொற்ப வருமானத்தைக் கொண்டு, அசோக்குமாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை செய்ய முடியாத நிலையில், அவரது உடல்நிலை மோசமானது. வைத்தியம் பார்க்க வருமானம் இல்லாததால் ஏற்கனவே மன உளைச்சலில் வாழ்ந்து வந்த இவர்கள் மூவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, கடந்த வியாழக்கிழமை எலி மருந்தை உட்கொண்டனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது மூவரும் மயங்கிய நிலை யில் கிடந்ததாகவும், பின்னர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படு கிறது. அவர்களை பரிசோதித்த மருத்துவர் அருகநாதனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அசோக்குமாரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் மரண மடைந்தார். பரமேஸ்வரிக்கு மன்னார்குடியில் தொ டர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மன்னார்குடி காவல்துறையினர் புலன்விசாரணை நடத்தி வருகின்ற னர். வறுமையாலும் மருத்துவத்திற்கு வசதி இல்லாததா லும் நேர்ந்த இச்சம்பவம் மன்னார்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் மீது போக்சோவில் வழக்கு
புதுக்கோட்டை, நவ.16 - சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது போக்சோவில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மணமேட்டுப் பட்டியைச் சேர்ந்தவர் சூரியா (22). செங்கல் சூளையில் வேலைபார்த்து வரும் கூலித் தொழிலாளியான இவர், தனது உறவுக்கார 14 வயது சிறுமியை கடந்த ஜூன் மாதத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்தச் சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பறிமுதல் வாகனங்கள் நவ.19-இல் ஏலம்
அரியலூர், நவ.16- அரியலூர் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நவ.19 ஆம் தேதி ஏலம் விடப்படுவ தாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினரால், மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 46 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் 19.11.2024 அன்று காலை 10 மணிக்கு அரியலூர் மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள், ஏலம் விடப்படும் அன்றைய நாளில் (19.11.2024) காலை 8 மணிக்கு முன்பணம் ரூ.1,000 செலுத்தி தங்களது பெயர் முகவரியை பதிவு செய்து கொண்டு ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்டவர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அவருடன் பிறருக்கு அனுமதியில்லை. வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர் பிற்பகல் 3 மணிக்குள் ஏலத் தொகையுடன், ஜிஎஸ்டி தொகை முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால் முன்பணம் திருப்பி தரமாட்டாது. வாகனத்துடன் ஏலம் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும். வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது. பொது ஏலத்தில் காவல்துறை சார்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதியில்லை. வாகனங்களை ஏலம் நடைபெறும் நவ.19 அன்று காலை 8 மணி முதல் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையின் நகலை தவறாமல் கொண்டு வர வேண்டும். ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தை அணுகலாம்” என்றார்.
தஞ்சை பெரியகோயிலில் அன்னாபிஷேகம்
தஞ்சாவூர், நவ.16 - தஞ்சாவூர் பெரியகோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி யையொட்டி, பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடைபெறும். இந்த விழா தஞ்சாவூர் பெருவுடையார் கோயி லிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இக்கோயிலில் வெள்ளிக் கிழமை மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் ஆயிரம் கிலோ அரிசியும், 600 கிலோ காய்கள், பழங்களும் அளித்தனர். பின்னர், மாலையில் தயாரிக்கப்பட்ட சோற்றைக் கொண்டு 13 அடி உயரமுடைய பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிபிஎம் கரூர் மாவட்ட மாநாடு நவ.18, 19 தேதிகளில் நடக்கிறது
கரூர், நவ.16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட 10 ஆவது மாநாடு நவ.18, 19 ஆகிய தேதி களில் கரூரில் நடைபெறுகிறது. இதுகுறித்து கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதி பாசு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் தொழிலா ளர்கள், ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்க ளின் அடிப்படை தேவைகளுக்காக வும், அவர்களது உரிமைகளை மீட்டெடுக்கவும் அதனை பாது காக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தனது கடமையை போராட்ட களத்தில் தொடர்ந்து செய்து வருகிறது. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் அருந்ததியர், பட்டியல் இன மக்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும், அவர்களின் உரிமை களை பாதுகாக்கவும் தொடர் போராட்டங்களை நடத்தி, அவர் களுக்கு துணை நின்று பாது காத்து வருகிறது. கரூர் நகரத்தில் உள்ள ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில் களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் எனக் கோரி தொடர் போராட்டங்களை சிஐ டியு உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்கள் பங்களிப்புடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாவட்டத்தில் களம் கண்டு வருகிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான இழப்பீடு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. கடவூர், தோகைமலை, குளித் தலை, கிருஷ்ணராயபுரம், க.பர மத்தி உள்ளிட்ட ஒன்றியப் பகுதி களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நூறு நாள் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பல நூற்றுக்கணக்கான போராட்டங் களை கரூர் மாவட்டத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது. இவ்வாறு மக்களின் கோரிக்கை களை முன்னெடுத்து அவர்களுக் காக போராட்ட களம் கண்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட 10 ஆவது மாநாடு கரூரில் உள்ள ஜி.ஆர்.திருமண மண்டபத்தில் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறு கிறது. முதல் நாளான நவ.18 அன்று மாலை 5 மணிக்கு கரூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து செங்கொடி ஏந்தி பேரணி துவங்கு கிறது. பிறகு உழவர் சந்தையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது. 2 ஆம் நாளான நவ.19 அன்று ஸ்தாபன மாநாடு நடைபெறுகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, ஆர்.ராதிகா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இந்த மாநாட்டு பொதுக் கூட்டத்தில் கட்சியின் உறுப்பி னர்கள், பொதுமக்கள், தொழிலா ளர்கள் வெகுஜன அமைப்புக்கள் என அனைத்து தரப்பினரும் திரளாக கலந்து கொள்ள உள்ள னர். கரூர் மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்திட, மாநாட்டு வர வேற்பு குழு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
பேராவூரணி வழியாக இராமேஸ்வரம் - சென்னைக்கு ரயில் இயக்க கோரிக்கை
தஞ்சாவூர், நவ.15 - பேராவூரணி வழியாக இராமேஸ்வரம் - சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஏ.மெய்ஞானமூர்த்தி, செயலாளர் ஏ.கே.பழனிவேல், ஒருங்கிணைப்பாளர் பாரதி வை.நடராஜன் மற்றும் நிர்வாகிகள், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது: பேராவூரணி வழியாக இராமேஸ்வரம் - சென்னைக்கு இரு வழித்தடங்களிலும் விரைவு ரயில் இயக்க வேண்டும். அனைத்து விரைவு ரயில்களும் பேராவூரணி ரயில் நிலை யத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட, ரயில் கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.