இலவச மனைப் பட்டா கேட்டு விவசாயிகள் சங்கம் மனு
கரூர், ஜன.19 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட பொருளாளர் கே.சுப்பிரமணியன் தலைமையில் கோரிக்கை மனுவை வழங்கினர். அம்மனுவில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மாயனூர் கஸ்பா சந்தை பேட்டையில் நத்தம் சர்வே எண்.166/4ஏ-இல் 19 குடும்பத்தினர் வீடு கட்டி கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்கள் குடிதண்ணீர், வீட்டு வரி. மின் கட்டணம் ஆகியவற்றை முறையாக அரசுக்கு செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கி அவர்கள் வாழ்வா தாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு கேட்டுக் கொள்கிறது” என கூறியிருந்தனர்.
போக்சோ சட்டத்தில் காவலர் கைது
கரூர், ஜன.19 - கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப் பட்டார். கரூரை அடுத்த நெரூர் ரெங்கநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் பணிநிமித்தமாக காவல்நிலையம் அருகே உள்ள வாங்கப் பாளையத்தில் வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அரசுப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்தது தொடர்பாக, மாணவியின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் புகாரின் பேரில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வெள்ளிக்கிழமை இரவு இளவரசன் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதன்படி, அவரை சனிக்கிழமை அதிகாலை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இளவரசன் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை தாக்கிய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் காவ லர் பணிக்கு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன.22-இல் மக்கள் நேர்காணல் முகாம்
பாபநாசம், ஜன.19 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா, சாலியமங்க லம் சரகம், திருபுவனம், திரௌபதி அம்மன் கோவில் அருகில், கலையரங்கத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் ஜன.22 அன்று காலை 9 மணியளவில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறு கிறது. அது சமயம் சாலியமங்கலம், நல்லவன்னியன்குடி காடு, ஜெம்பகாம்பாள்புரம்-1, ஜெம்பகாம்பாள்புரம்-2 உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முதி யோர், விதவை, ஊனமுற்றோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, பிறப்பு, இறப்புச் சான்று, பட்டா மாறுதல், சாதி, வருமானம், இருப்பிடச் சான்று, குடும்ப அட்டையில் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர் பான மனுக்களை முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்து பயன்பெறலாம் என பாபநாசம் தாசில் தார் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போடி தனியார் கல்லூரியில் பொங்கல் விழாவில் மாணவர்கள் மோதல் 2 பேர் காயம்;போலீசார் வழக்கு பதிவு
தேனி, ஜன.19- போடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தின் போது மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது .இது தொடர்பாக போடி காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தேனி மாவட்டம், போடியில் குரங்கணி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் கடந்த திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டா டப்பட்டது. அப்போது கல்லூரியில் திம்மிநாயக்கன் பட்டியை சேர்ந்த இளங்கலை பொருளாதாரவியல் மூன்றா மாண்டு மாணவர் ஒருவர் வைத்திருந்த பொங்கல் பானையை இதே கல்லூரியில் இளங்கலை மூன்றா மாண்டு மற்றும் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் காலால் உதைத்து தள்ளி விட்டு தகராறு செய்துள்ள னர். இளங்கலை பொருளாதாரவியல் மாணவனையும், விலக்க வந்த போடி தருமத்துப்பட்டியை சேர்ந்த மற்றொரு மாணவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த இரண்டு மாணவர்களும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போடி நகர் காவல்துறை யினர், தகராறு செய்து தாக்கிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஆட்டோ கவிழ்ந்து பெண் தொழிலாளி பலி
தேனி, ஜன.19- சின்னமனூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் தொழி லாளி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சின்னமனூர் அருகே கன்னிச்சேர்வைபட்டியைச் சேர்ந்த அன்னக்கொடி(48), இந்திராணி(70), பேச்சியம்மாள்(72), தங்கத்தாய் (55), பூச்சியம்மாள் (58) உள்ளிட்ட 11கூலித் தொழிலாளர்கள் ஷேர் ஆட்டோ வில் எரசக்கநாயக்கனூருக்கு சென்று கொண்டிருந்த னர். ஓட்டுநர் முருகன்(55) ஆட்டோவை ஓட்டிச் சென்றார். சின்னராமன் கவுண்டன்பட்டி அருகே உள்ள வளைவில் சென்ற போது ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் அன்னக்கொடி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இது தொடர்பாக சின்னமனூர் காவல்நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
70 வயது நிறைந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஜன.19- ஓய்வுபெற்ற சிறை பணியாளர்கள் நலச்சங்க 11 ஆம் ஆண்டு ஆலோசனை கூட்டம் திருச்சியில் ஞாயிறன்று நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். திருச்சி மகளிர் தனி சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, ஓய்வுபெற்ற சிறைத்துறை துணைத் தலைவர் முனிவேலு, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாநிலச் செயலாளர் செந்தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தங்கவேல், ஓய்வுபெற்ற தலைமை நன்னடத்தை கண்காணிப்பாளர் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், 5 வருடமாக நிலுவையில் இருக்கும் ஓய்வுபெற்ற சிறை பணியாளரின் இளையவருக்கு நிகரான ஊதிய முரண்பாட்டை களைந்து தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் அவரது வாரிசுக்கு ரூ.50,000 வழங்குவது போல், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்தி ரூ.50,000 வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் குடும்ப நல நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளர் கணேசன் வரவேற்றார். செயல் தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன கட்டணக் கொள்ளை நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
புதுக்கோட்டை, ஜன.19 - புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடக்கும் இருசக்கர வாகன கட்டணக் கொள்ளையை புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாநகரக் குழுக் கூட்டம் மாவட்டக் குழு உறுப்பினர் டி.காயத்ரி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், மாநகரச் செயலாளர் புதுகை எஸ்.பாண்டியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், “புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்திலும், சில தனியார் இடங்களிலும் வாடகைக்கு இருசக்கர வாகனம் நிறுத்தகங்கள் இயங்கி வருகின்றன. தனியார் நிறுவனங்கள் மூலம் இயங்கி வரும் வாகன நிறுத்துமிடங்களில் ஒரு நாளைக்கு ரூ.10 வீதம் வசூலிக்கப்படுகிறது. இங்கு ஒரு நாள் என்பது எந்த நேரத்தில் வாகனத்தை நிறுத்துகிறோமோ, அதிலிருந்து 24 மணிநேரம் எனக் கணக்கிடப்படுகிறது. அதே நேரத்தில், மாநகராட்சி கட்டிடத்தில் இயங்கி வரும் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் ஒரு நாளைக்கு ரூ.15 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், ஒரு நாள் என்பது எந்த நேரத்தில் வாகனத்தை நிறுத்தினாலும் இரவு 12 மணி ஆனவுடன் ஒரு நாள் முடிந்து விட்டதாக கணக்கிடப்படுகிறது. உதாரணத்திற்கு இரவு 11 மணிக்கு வாகனத்தை நிறுத்தி ஒரு மணி நேரம் கழித்து 12 மணிக்கு வாகனத்தை எடுத்தாலும் இரண்டு நாள் வாடகை கணக்கிடப்பட்டு ரூ.30 வசூலிக்கப்படுகிறது. நியாயமாகப் பார்த்தால், தனியார் இடத்தில் இயங்கும் வாடகை நிறுத்தத்தை விட, மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கும் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில்தான் குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். எனவே, மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் இருசக்கர வாகன கட்டணக் கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதோடு, குறைந்த கட்டணம் வசூலிப்பதற்கு புதுக்கோட்டை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காரைக்குடிக்கு ஜன.21-ல் முதல்வர் வருகை: அமைச்சர்கள் ஆய்வு
சிவகங்கை, ஜன.19- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத் திற்கு வருவதையொட்டி அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் ஜன.21, 22 ஆகிய தேதி களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் செய்கிறார். ஜன.21-ம் தேதி காரைக்குடி வரும் அவர், அழகப்பா பல்கலைக்கழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சொந்த நிதியில் கட்டிய வளர் தமிழ் நூலகத்தையும், மார்பளவு திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைக்கிறார். பல்கலைக்கழக கருத்தரங்கு கூடத்துக்கு வீறுகவியரசர் முடியரசனார் அரங்கு என பெயர் சூட்ட உள்ளார். இதையொட்டி ஞாயிறன்று பல்கலைக்கழக வளா கத்தில் விழா ஏற்பாடுகளை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோர் பார்வையிட்டனர். எம்எல்ஏக்கள் தமிழரசி, மாங்குடி, துணைவேந்தர் ரவி ஆகியோர் உடனிருந்த னர். முதல்வரின் இந்த சுற்றுப் பயணத்தின்போது, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டங் களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவு பெற்ற பணிகளை திறந்தும் வைக்கிறார் என்று அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறினார்.
எழுத்தாளர் ஜனநேசனின் உடல் தானம் செய்யப்பட்டது
சிவகங்கை, ஜன.19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் எழுத்தாளர் ஜனநேசன் சனியன்று காலமானார். இதனையொட்டி அவருடைய உடல் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு செங்கொடி போர்த்தி உடல் தானம் செய்யப் பட்டது. மருத்துவமனை வளாகத்தில் ஜனநேசனின் மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ஐஏஎஸ் அதிகாரி கர்ணன், லண்ட னில் குழந்தைகள் நல்ல டாக்டர் நிரூபன் ஆகியோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை தானம் செய்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் பேரா.கண்ணன், இடைநிலை மருத்துவ ஆய்வாளர் மகேந்திரன், உடற்கூறி யல் துறை தலைவர் டாக்டர் ஆனந்தி ஆகியோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராம லிங்கபூபதி, காரைக்குடி தாலுகா செயலாளர் அழகர்சாமி, ஓய்வுபெற்ற அமைப்பின் காரைக்குடி செயலாளர் மாதவன், ஜீவானந்தம், எல்ஐசி ஊழியர் சங்க தலைவர் குணசேகரன், தமுஎகச மாவட்டத் தலைவர் முனைவர் பேரா.தங்க முனியாண்டி, நகைச்சுவை துணுக்கு எழுத்தா ளர் ராஜாஜி ஞானம், மற்றும் பலர் கலந்து கொண்டனர். டாக்டர் ஆனந்தி கூறுகையில், உடல் தானம் செய்வ தற்காக 96 பேர் பதிவு செய்துள்ளனர். ஒரு வருடத்திற்கு 10 உடல்கள் தேவை உள்ளது என்று கூறினார்.
பஞ்சர் கடையில் திருட முயன்ற 2 பேர் கைது
நத்தம், ஜன.19- திண்டுக்கல் மாவட்டம் நத்தம்- கோவில்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (53). இவர் யூனியன் அலுவலகம் எதிரே பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் அன்று இரவு இவரது கடைக்குள் பொருட்களை உருட்டும் சத்தம் கேட்டது. இதைப் பார்த்த கடைக்கு மேல் இருக்கும் வீட்டுக்காரர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தி னர் திரண்டு கடைக்குள் சென்றனர். உள்ளே சென்று பார்த்த போது இரண்டு பேர் பொருட்களை திருடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் பிடித்து நத்தம் போலீ சில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசார ணையில் திருட வந்த இருவர் மானாமதுரையை சேர்ந்த கிஷோர்(20), மதுரையை சேர்ந்த நவீன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் மீது வேறு ஏதேனும் திருட்டு வழக்குகள் உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துளிர் இல்ல பயிற்சி
இராமநாதபுரம், ஜன.19- இராமநாதபுரத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம், ஆராய்ச்சி மனப்பான்மை, உள்ளூர் வளங்களை பாதுகாத்தலில் மாணவர்களின் ஆளுமைத் திறன்களை வளர்க்கும் விதமாக முதல் கட்டமாக 50 கிராமங்களில் துளிர் இல்லங்கள் அமைக்கப்பட்டு, இதன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப் பட்டது. துளிர் இல்லத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி இராமநாதபுரம் சபா நடேசய்யர் துவக்கப் பள்ளியில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் ஜெ.ஜே.லியோன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் நவநீதகிருஷ்ணன், வின்சென்ட் வீரு, மாவட்ட துணைச் செயலாளர் பரமேஸ்வ ரன், ஆசிரியர் சொர்ண கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துளிர் இல்ல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம் வரவேற்புரையாற்றினார். மூத்த கல்வியாளரும், பணி நிறைவு பெற்ற தலைமையாசிரிய ருமான பி.கே.மணி பயிற்சியை துவக்கி வைத்து அறி வொளி இயக்கத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். துளிர் இல்லங்களின் நோக்கங்கள், மாணவர்களின் கற்றல் திறன்களை எப்படி ஊக்கப்படுத்துவது என்பதை பற்றி காகித மடிப்புக் கலை பயிற்சியின் வல்லுநர் துளிர் இல்ல மாநில கருத்தாளர் அமலராஜன் பயிற்சி வழங்கி னார். துளிர் இல்லங்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் கு.காந்தி விளக்க உரை யாற்றினார். மாவட்ட பொருளாளர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். ஜான் மெர்சி ராணி, பிரியங்கா ஆகியோர் பயிற்சி வழங்கினர். நிகழ்வில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட அறி வியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சாகுல் மீரா நன்றி கூறினார்.
இலங்கை அகதிகள் முகாமில் 40 ஆண்டுகளாக வசித்து வருபவர் இந்திய குடியுரிமை கோரி மனு
மதுரை, ஜன.19- திருச்சி கோட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் மதினி என்ற பெண் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் “1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி எனது குடும்பத்தினரு டன் இந்தியாவிற்கு வந்தோம். கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகிறோம். நாங்கள் இந்தி யாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மக்கள். கோட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் 1991 ஆம் ஆண்டு முதல் வசித்து வரும் 44 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இந்திய குடியுரிமை வழங்கக் கோரி மனு அளித்து வருகிறோம். கடந்த 2022 ஆம் ஆண்டு விண் ணப்பித்தோம். அது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சி யர் விசாரணை நடத்தி மத்திய உள்துறைச் செயலருக்கு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பான எனது விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய நட வடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை சனியன்று விசாரித்த நீதிபதி இளந்திரையன், “மனுதாரர் கடந்த 2022 இல் இந்திய குடியுரிமை வழங்கக் கோரி விண்ணப்பித்து உள்ளார். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆகவே மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, 12 வாரங்க ளுக்குள்ளாக உரிய முடிவெடுக்க மத்திய உள்துறை செயலருக்கு உத்தர விட்டு வழக்கை முடித்து வைத்தார்.
ராணுவ வீரர் வீட்டில் நகைகள் திருட்டு
குழித்துறை, ஜன. 19- கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மணலி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (47), ராணுவ வீரர். தற்போது அந்தமானில் வேலை பார்த்து வரு கிறார். கடந்த 10 நாள்களுக்கு முன் இவரது மனைவி, பிள்ளை கள் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அலமாரி திறந்து கிடந்தது. அதில் இருந்த 22 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 12 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து கொல்லங்கோடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஞாயி றன்று விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெபக்கூட்டம்: பொய்யாக மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
மதுரை, ஜன.19- கன்னியாகுமரி மாவட்டம் களியக்கா விளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெபக் கூட்டம் நடத்துவதாக, ஏற்கனவே உள்ள நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.25 ஆயிரம் அப ராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு விபரம் வருமாறு: களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எபி சாலமன், கமலம் ஆகியோர் ஜெபக் கூட்டம் நடத்துகின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிப்போருக்கு இடையூ றாக உள்ளது. இதுகுறித்து காவல்நிலை யத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை யும் இல்லை. எனவே எபி சாலமன், கமலம் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த வழக்கை சனியன்று விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு வருமாறு: மனுதாரர் திருத்துவபுரம் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் செயலராக உள் ளார். இவர், கடந்த ஏப். 2022 ஆம் ஆண்டில் எபிசாலமன், கமலம் மீது புகார் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் ஜெபக் கூட்டம் நடத்தி கொள்ள லாம். அதை மீறும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இந்த ஜெபக் கூட்டம் நடத்துவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த டிசம்பர் 2022 இல் மனு தாரர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது மனுதாரர் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். இவர், எதிர் மனு தாரர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுவதாக தெரிகிறது. எபி சாலமன், கமலம் ஆகியோர் தேவாலயம் நடத்த வில்லை, ஜெபக் கூட்டம் தான் நடத்தி யுள்ளனர். எனவே மனுதாரின் மனு தள்ளு படி செய்யப்படுவதுடன், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரர், எபி சாலமன், கம லம் ஆகியோருக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
தடுப்பணையின் தண்ணீரில் மூழ்கி டிரைவர் பலி
ஒட்டன்சத்திரம், ஜன.19- ஒட்டன்சத்திரம் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி சரக்கு வேன் டிரைவர் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பண்ணைப்பட்டி கோம்பை கிராமத்தைச் சேர்ந்த சுந்திரபாண்டி (33). இவர் இப்பகுதிகளில் உள்ள சரக்குவேன்களுக்கு டிரைவராக பணியாற்றி வருகிறார். சனியன்று மாலை ஊருக்கு அருகே உள்ள கோம்பை தடுப்பணைக்கு வேடிக்கை பார்ப்பதற்கு சென்ற சுந்தரபாண்டி, எதிர்பாராதவிதமாக தடுப்பணையின் உள்ளே விழுந்து சேற்றில் சிக்கி பலியானார். இதை பார்த்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் இதுகுறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேற்றில் சிக்கி கிடந்த சுந்தரபாண்டியின் உடலை மீட்டனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜீரோ பேலன்ஸ்சில் துவக்கப்பட்ட வங்கி கணக்குகள் மினிமம் பேலன்ஸ் இல்லை என முடக்கம் மாணவர்கள் கடும் அவதி
நாகர்கோவில், ஜன.19- ஜீரோ பேலன்ஸ் என்ற முறையில் வங்கி யில் துவக்கப்பட்ட கணக்குகள் மினிமம் பேலன்ஸ் இல்லை என கணக்குகள் முடக்கப் பட்டதால் மாணவ, மாணவியர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஐஓபி வங்கி உள்ளது. இங்கு அதனை சுற்றியுள்ள மக்கள் மற்றும் மாணவ, மாணவியர் அங்கு கணக்கு துவங்கி பண பரிவர்த்தனை செய்து வரு கின்றனர். இதில் மாணவ, மாணவியருக்கு கணக்கு துவங்கும்போது, ஜீரோ பேலன்ஸ் என கணக்கு துவங்கி அதனை பயன்படுத்தி வந்த னர். பல மாணவர்கள் 18 வயதை எட்டாத வர்கள் என்பதால் கூட்டு கணக்கு துவங்கி யுள்ளனர். அதுவும் ஜீரோ பேலன்ஸ் என்ற முறையில்தான் கணக்கு துவங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாணவ, மாணவியர் தாங்கள் வைத்தி ருக்கும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்த முடி யாமல் இருந்துள்ளனர். இது குறித்து மாணவ, மாணவியர், பெற்றோர்கள் வங்கிக்கு சென்று விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது அந்த வங்கியின் அதிகாரி, தங்களின் ஏடிஎம் கார்டு பயன்படுது்த முடி யாதபடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் நீங்கள் மினிமம் பேலன்ஸ் தொகையை வங்கியில் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். நாங்கள் ஜீரோ பேலன்ஸ் என்ற முறை யில்தான் கணக்கு துவங்கினோம். திடீரென எந்த தகவலும் முன்னறிவிப்பும் இன்றி இவ்வாறு செய்தது எப்படி சரியாகும் என விவாதம் எழுப்பினர். ஆனால் வங்கி அதிகாரி அதை காதில் வாங்காமல் நீங்கள் உங்கள் கணக்கில் ரூ.1000-க்கும் குறையாமல் எப்போதும் வைத்திருக்க வேண்டும். எனவே முதலில் ரூ.1000 கட்டி மீண்டும், ஆதார், பேன் கார்டு உள்ளிட்டவைகளை கொடுத்து, உங்கள் கணக்கை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார். மேலும், ரூ.1000 க்கும் கீழ் பணம் வைத்திருந்த கணக்கு களில் அபராதம் விதித்தும் உள்ளனர். அந்த பணத்தையும் சேர்த்து கட்டி னால்தான் கணக்கு உபயோகத்திற்கு வரும். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாண வியர், பெற்றோர்கள் இது குறித்து முழு விளக்கம் கேட்டு வங்கி அதிகாரியிடம் முற்று கையிட்டனர். ஆனால் அதற்கு அந்த அதிகாரி எந்த பதிலும் அளிக்காமல் சென்று விட்டார். தமிழக அரசு வழங்கும் ரூ.1000 மற்றும் கல்வி உதவித் தொகை போன்ற பணத்தைப் பெற்று படித்து வரும் மாணவர்கள் ரூ.1000 எப்போதும் வங்கியில் வைத்திருக்க முடியுமா? அதற்கான அவசியம் என்ன? இவ்வாறு மினிமம் பேலன்ஸ் திட்டத்தை அமல் செய்ததால் மாணவ, மாணவியர் மற்றும் மக்களின் நலன் பாதிக்கப்படும். எனவே மினிமம் பேலனஸ் திட்டத்தை ரத்து செய்து, ஜீரோ பேலன்ஸ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மாணவ, மாண வியர், பெற்றோர்கள், பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.