புதுக்கோட்டை/திருவாரூர், செப்.12 - பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. குடும்ப அட்டையில் என்பிஎச்எம் என்ற குறியீடு உள்ள அட்டையை பிஎச்எச்-ஆக மாற்ற வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் முதி யோர் உதவித்தொகை வழங்க வேண் டும். அனைவருக்கும் பிரதான் மந்திரி வீடு வழங்க வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தை நகர்ப்புறங்களுக் கும் விரிவுபடுத்த வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாகவும், கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவ தும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் வி.கலைச்செல்வி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா சிறப்புரையாற்றினார். கோரிக்கை களை விளக்கி மாவட்டச் செயலாளர் பி.சுசீலா, தலைவர் எஸ்.பாண்டிச் செல்வி, ஒன்றியச் செயலாளர் பி.சோ பனா, பொருளாளர் கே.நதியா, துணைச் செயலாளர் எஸ்.கோமதி, துணைத் தலைவர் இ.லதா உள்ளிட் டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 215 மனுக்களை ஆலங்குடி வட்டாட்சியர் (பொ) ராஜேஸ்வரியிடம் சங்க நிர்வாகி கள் அளித்தனர். திருவாரூர்: நிலுவை ஊதியத்தை வழங்குக! திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் நூறு நாள் வேலையை விரிவுபடுத்த வேண்டும். நூறு நாட்களும் வேலை வழங்க வேண்டும். இப்பணிக்கான ஊதியம் கடந்த ஒரு மாதமாக நிலுவையில் உள்ளது. உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர், நீடாமங்கலம், கொரடாச்சேரி ஆகிய ஒன்றியங்களில் மாதர் சங்கம் சார்பாக மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் ஒன்றியத்தில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்டச் செய லாளர் ப.கோமதி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. நீடாமங்கலத்தில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஆர்.சுமதி தலைமையிலும், கொர டாச்சேரியில் சங்கத்தின் ஒன்றியச் செய லாளர் எல்.சுலக்சனா தலைமையிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டது.