districts

மேட்டூர் அணை திறக்கப்பட்டால் முதலில் ஏரி, குளங்களில் நீரை நிரப்ப வேண்டும்

தஞ்சாவூர், ஜூலை 28-  மேட்டூர் அணை நிரம்பி திறக்கப்பட்டால் தண்ணீரை ஏரி, குளங்களில் முதலில் நிரப்ப வேண்டும் என மூத்த வேளாண் வல்லு நர் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். தஞ்சாவூரில் விவசாயிகள் குறைதீர்க்கும்  நாள் கூட்டத்துக்கு வந்த மூத்த வேளாண் வல்லுநர் குழுவினர் வி.பழனியப்பன், பி. கலைவாணன் ஆகியோர் மாவட்ட ஆட்சி யர், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயி களிடம் கூறியதாவது:   மேட்டூர் அணையை எப்போது திறக்க வேண்டும். எந்த மாதிரியான சாகுபடி முறையை பின்பற்ற வேண்டும் என கடந்த 19  ஆண்டுகளாக வேளாண்துறையின் மூத்த  வல்லுநர்களைக் குழு கொண்ட அமைப்பி னர் அரசுக்கும், விவசாயிகளுக்கும் ஆலோ சனை வழங்கி வருகிறோம். நிகழாண்டு மே மாதமே எங்களது குழு வினர் சார்பில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு, தென்மேற்கு பருவமழையின் தொ டக்கம், வானிலை ஆய்வு மையத்தின் தக வல் ஆகியவற்றை கணித்து ஆகஸ்ட் 15 ஆம்  தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கலாம் எனக் கூறினோம். தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விரை வில் அணை நிரம்பி, மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு அணைகள் திறக்கப்பட்டால், மேட்டூர் அணை யின் கொள்ளளவுக்கு நிகராக டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் தண் ணீரை சேமித்து வைக்கலாம்.  குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமே 4,303 ஏரி, குளங்கள் உள்ளன. இந்த  குளங்களில் நீரை நிரப்பி வைக்கலாம். மேலும், தரிசு வயல்களிலும் தண்ணீரை நிறுத் தலாம். தரிசு வயல்களில் தண்ணீரை நிறுத்தி  வைக்கும்போது நுண்ணுயிர் சத்துகள் பயி ருக்கு அதிகளவு கிடைக்கும். டெல்டா மாவட்டங்களில் சுமார் 12 லட்சம்  ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்வது வழக்கம். இதற்கு 185 டிஎம்சி தண்ணீர் தேவைப் படும். தற்போது மேட்டூர் அணை நிரம்புவது  போல் மீண்டும் ஒருமுறை நிரம்ப வேண்டும். சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் மாதத்தில்  முன்னேற்பாடு பணிகளை தொடங்கினா லும், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு பின்னர்  விதைகளை விதைக்க வேண்டும். முன் கூட்டியே விதைகளை விதைத்தால், அந்த  நெற்பயிர் பூ பூக்கும் தருணமான அக்டோபர் மாத வடகிழக்கு பருவமழையில் வீணாகி, மகசூல் குறைய வாய்ப்புள்ளது. அதேபோல், விவசாயிகள் பெரும்பாலும் நேரடி நெல் விதைப்பு முறையை பின்பற்றி னால் நடவு வரை ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்  வரை மிச்சப்படுத்தலாம். அதே நேரத்தில் கூடு தலாக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த  முறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.