districts

img

போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

புதுக்கோட்டை, பிப்.22:  தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.  புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ் நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் சார்பில் இலவச சர்க்கரை நோய், நுரையீரல் பரிசோதனை முகாம் மற்றும் விழிப் புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து போதைப் பொருள் தீமை குறித்த விழிப் புணர்வு மினி மாரத்தான் போட்டி நடை பெற்றது. இந்த மாரத்தான் போட்டி விளை யாட்டு மைதானத்தில் தொடங்கி புதிய பேருந்து நிலையம், பிருந்தாவனம், பால் பண்ணை வழியாக மீண்டும் விளையாட்டு திடலை வந்தடைந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.