தஞ்சாவூர், ஆக.1-
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறையும், இராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறி வியல் கல்லூரியும் இணைந்து கல்லூரி மாண வர்களுக்கான நாடகப் பயிற்சிப் பட்டறை மற்றும் பட்டய வகுப்புகள் நடத்துதல் தொடர்பான புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
இதில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன், முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் ஆராய்ச்சி புல முதன் மையர் முனைவர் ந.சுதாகர் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பதிவாளர் முனைவர் சி.தியாக ராஜன், கலைப்புல முதன்மையர் முனைவர் பெ.இளையாப்பிள்ளை, நாடகத்துறைத் தலைவர் முனைவர் சி.வீரமணி, முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.கணியன் பூங்குன்றனார், முனைவர் பெ.வெங்கடாசலம், நாடகத்துறை கௌரவ உதவிப் பேராசிரியர் முனைவர் ப.ரெங்கராஜ் மற்றும் கண்காணிப்பாளர் மு.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.