districts

மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் விமானப் படை பணி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

அரியலூர், மார்ச் 5 - அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூரில் மாவட்ட  வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டல் மையம் சார்பில் இந்திய  விமானப் படை பணிகளுக் கான ஊக்குவிக்கும் தொழில்நெறி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. மீனாட்சி ராமசாமி பாலி டெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச் சிக்கு, அக்கல்லூரியின் தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் தலைமை வகித்தார். மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மூ.வினோத்குமார், இளம் தொழில் வல்லுநர்  அ.எபினேஸர் ராஜா ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இந்திய விமானப் படை கமெண்டிங் அலுவலர் கே. மூர்த்தி, விமானப் படையில் உள்ள பணி வாய்ப்புகள் குறித்தும், அதற்கான தகுதி கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.  தொடர்ந்து இதுகுறித்து நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் வெற்றி  பெற்ற மாணவ-மாணவி களுக்கு பரிசுகள் மற்றும்  சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. முன்னதாக கல்லூரி முதல்வர் ச.சிவசங்கர் வர வேற்றார். மாவட்ட வேலை வாய்ப்பு இளநிலை உதவி யாளர் அ.அருணா நன்றி தெரிவித்தார்.