districts

 திண்டுக்கல் போலி டாக்டர் கைது

நத்தம், ஜுலை 15-

     திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் போலி டாக்டர்கள் அதி கம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.  இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஊரக நலப்பணி கள் இணை இயக்குநர் பூமிநாதன் தலைமையில் கொசவ பட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் மற்றும்  போலீசார் வேம்பார்பட்டியில் உள்ள மருத்துவமனையில்  சோதனை மேற்கொண்டனர். அப்போது கலாவதி என்ப வர் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவம்  செய்தது விசாரணையில் தெரியவந்தது . இதைதொடர்ந்து  அவரை கைது செய்த சாணார்பட்டி போலீசார் அவர் வைத்திருந்த ஊசி,மாத்திரை, மருந்துகளை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.