தஞ்சாவூர், ஆக.12- மத்திய மண்டலத்தில் காவல் துறையின ரால் கைப்பற்றப்பட்ட 1,145 கஞ்சா காவல் துறை அலுவலர்கள் முன்னிலையில் நவீன இயந்திரம் மூலம் திங்கள்கிழமை அழிக்கப் பட்டது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடு துறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரிய லூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்க ளில் கடந்த ஓராண்டு காலத்தில் காவல்துறை யினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா, நீதிமன்ற உத்தரவின்படி திங்கள்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப் பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவக் கழிவுகள் அழிக்கும் கூடத்திற்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல்துறையினர் கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்தனர். தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜியா உல்ஹக், கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு, அந்த மாவட்ட காவல் துறையினரிடம், விவரங்கள் கேட்டறிந்தார். பின்னர் காவல்துறையினர் அனைவரும் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கஞ்சாவை அழிக்கும் பணியை டிஐஜி கொடிய சைத்து தொடங்கி வைத்து, அதற்கான இயந்திரத்தில் கஞ்சா பண்டல்களையும், மூட்டைகளையும் போட்டார். தொடர்ந்து நவீன இயந்திரத்தில் கஞ்சா முழுவதும் தீயிட்டு அழிக்கப்பட்டது. இந்த பணியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் விவேகானந்த சுக்லா, ஏடிஎஸ்பிக்கள் தஞ்சாவூர் முத்தமிழ்செல்வன், புதுக்கோட்டை சுப்பையா, பெரம்பலூர் பாலமுரு கன், கரூர் பிரபாகரன், டிஎஸ்பிக்கள் நாகை முத்துக்குமார், திருவாரூர் இமானுவேல் ராஜ்குமார், அரியலூர் தமிழ்மாறன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வா ளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியா உல் ஹக் கூறுகையில், “மத்திய மண்டலத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் காவல்துறை மூலம் 2,899 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, 2,625 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. இதில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று 1,145 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் காவல் சரகத்தில் கஞ்சா விற்ப னையில் ஈடுபடுவோரை கண்டறிந்து, கைது செய்யப்பட்டு, அவர்களது வங்கி கணக்கு கள் முடக்கப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங் களில் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் சரகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கு லையாத வகையில் பாதுகாப்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன” என்றார்.