திருச்சிராப்பள்ளி, அக்.25 - பிரணவ் ஜூவல்லரி நிறுவனம் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இதில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி, வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது: திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக் கடை தமிழ கம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் கிளைகளை உருவாக்கி, கடந்த சில ஆண்டு களாக செயல்பட்டு வருகிறது. ரூ.100 கோடி மோசடி இந்த நிறுவனம் டெபாசிட்டு களுக்கு கூடுதல் வட்டி தருவதாக வும், ரூ.5 லட்சம் செலுத்தினால் 2 சத வீத வட்டியாக மாதந்தோறும் ரூ.10,000 தருவதாகவும், பழைய நகைகளை டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டிற்கு பிறகு சேதாரம்-செய் கூலி இல்லாமல் புதிய நகை தருவதாகவும், தினம் ரூ.150 நகைசீட்டு கட்டி னால், ஆண்டு இறுதியில் 1 பவுன் (8 கிராம்) தங்கம் தருவதாகவும் கூறி யுள்ளது. தங்களது கடை ஊழி யர்களை வைத்து சாதாரண ஆட்டோ தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என ஏழை மக்களிடம் ஆசை வார்த்தை களை கூறி வசூல் செய்துள் ளது. தற்போது கட்டிய பணம், நகைகளை திருப்பித் தராமல் மேற்கண்ட கடைகளை இழுத்து மூடியுள்ளனர். தமிழகம் முழுவதும் இது போன்று 10,000-க்கும் மேற்பட்ட வர்களிடம் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்திருக்கிறார்கள். பணத்தை இழந்த பொதுமக்கள் செய்வதறியாது திண்டாடிக் கொண் டிருக்கிறார்கள். இதுபோன்ற மோசடியான நிதி நிறுவனங்கள் சமீப காலங்களில் புற்றீசல் போல் பெருகி வருகின்றன. எல்பின், ஆருத்ரா, நியோமேக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், மக்கள் பணம் பல ஆயிரம் கோடியை சூறையாடி விட்டன. மோசடி நிறுவ னத்தின் உரிமையாளர் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவி னர்களின் சொத்துகளே கைப்பற்றப்படு கின்றன. இது மொத்த தொகையில் 15 சதவீதம் தான்.
இவர்கள் பினாமிகள் பெயரில் வைத்திருக்கும் சொத்து களை காவல்துறையின் புலனாய்வு கள் கணக்கில் எடுப்பதில்லை. கண்காணிப்பு இல்லை மேலும் ஒன்றிய அரசின் “மத்திய ரிசர்வ் வங்கியின்” நிதி கையாளும் சட்டத்திற்குட்பட்டு, பல சீட்டு கம்பெ னிகள், நிதி நிறுவனங்கள் இயங்குவ தில்லை. குறிப்பாக Deposit insurance and Crdit guarantee corporation-ல் அனைத்து நிதி நிறு வனங்களும் பெறப்படும் டெபாசிட் டுகளை காப்பீடு செய்ய வேண்டும் என நிதி கையாளுதல் ஒழுங்கு முறைச் சட்டம் சொல்கிறது. ஆனால் அரசும் காவல்துறையும் இது போன்று எந்த கண்காணிப்பும் செய் வதாக தெரியவில்லை. தனிச்சட்டம் தேவை இன்றைக்கும் பல நகைக் கடை கள், சீட்டு கம்பெனிகள், எம்எல்எம் நிறுவனங்கள், மக்களிடமிருந்து பல வகைகளில் டெபாசிட் தொகைகளை எந்த வரைமுறையும் இன்றி வசூல் செய்து வருகின்றன. தமிழக அரசு, காவல்துறை இவைகளை கண்கா ணிக்க வேண்டும். இவற்றை விசா ரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். தமிழக அரசு இதற் கென தனிச்சட்டத்தை இயற்ற வேண்டும். பிரணவ் ஜுவல்லரி நிறுவனத் திடம் பணம் கட்டியும், நகைகளை கொடுத்தும் ஏமாற்றமடைந்த மக்க ளுக்கு இழந்தவற்றை மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் வியாழனன்று (அக்.26) காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.