சேலம், அக் 21- சேலம் குவாலியர் ஏரியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரி திங்களன்று சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கம் மற் றும் ஏரி இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இச்சங்கத்தின் தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பனமரத்துப்பட்டி பகுதியில் உள்ள குவாலி யர் ஏரியை ஆக்கிரமப்பிலிருந்து மீட்டு அதனை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும். சருகுமலை ஓடை பனைமரத்து பட்டி ஏரி ராஜாவாக்கால் ஆகியவற்றை தனியார் ஆக்கிர மிப்பு அகற்றவும், தூர்வாரி சீர்படுத்தக் கோரியும் முழக்கங் களை எழுப்பினர்.