districts

img

தொடர் உண்ணாவிரதம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், டிச.9- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே சாகும் வரை தொடர் உண்ணா விரதம் இருந்து வரும், மாரனேரி விவ சாயிகளுக்கு ஆதரவாக, பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் தஞ்சையில் வியாழனன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் மாரனேரி கிராமத்தில் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தி லிருந்து குத்தகை, பட்டா அனுமதி பெற்று விவசாயம் செய்து வருகின்ற 94 விவசாயக் குடும்பங்களை ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற நீதி மன்ற  பொதுவான தீர்ப்பு அடிப்படை யில் இந்த ஆண்டு விவசாயம் செய்ய விடாமல் தடுத்து, விவசாய நிலங்க ளில் இருந்த அந்தக் குடும்பங்களை  தஞ்சாவூர் பொதுப்பணித்துறை நிர்வாகமும், வருவாய் நிர்வாகமும் வெளியேற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றது.  தமது வாழ்வாதாரமும், வாழ்வு ரிமையும் பாதிக்கப்படுவதை கண்டித்து, விவசாய நிலத்தில் தங்கள் உரிமைகளை, கோரிக்கை யின் நியாயங்களை தமிழ்நாடு அரசும்,  மாவட்ட நிர்வாகமும் உணர்ந்து முறையான தீர்வு காண வேண்டி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாரனேரி கிராமத்தில் சாகும்வரை தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.  இவர்களுக்கு ஆதரவாக தஞ்சை யில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக் கங்கள் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட் டம் தமிழர் தேசிய முன்னணி தேர்தல் பணிக் குழு உறுப்பினர் அய்யனா புரம் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.  

ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் துவக்கி வைத்து பேசினார்.  இதில், தாளாண்மை உழவர் இயக்கத்தின் நிறுவனர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, சமவெளி விவ சாயிகள் இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் பொறியாளர் சு.பழனிரா ஜன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன், இந்திய ஜனநாயக கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் ச.சிமியோன் சேவியர் ராஜ், சிபிஎம்எல் மக்கள் விடு தலைக் கட்சியின் மாவட்ட செயலாளர் இரா.அருணாச்சலம், மனிதநேய ஜன நாயக கட்சி மாவட்ட பொருளாளர் ஏ.ஜெ.அப்துல்லா, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநகர செயலாளர் ராவணன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் கலையமுதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநகர நிர்வாகி சையத் முகைதீன், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி அப்துல் மஜீத், தமிழ் தேச மக்கள் முன்னணியின் மாநிலச் செயலாளர் ஆலம்கான், புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.மதியழகன், எழுத்தாளர் சாம்பான், விசிறி சாமி யார் முருகன், போராட்டக் குழு ஒருங் கிணைப்பாளர்கள் கே.நடராஜன், ஏ.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.  மக்கள் அதிகாரம் மாநில பொரு ளாளர் காளியப்பன் நிறைவுரை யாற்றினார். ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.