districts

img

ரேசன் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கக் கோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஆக.27 - அத்தியாவசியப் பொருட்கள் அனைத் தையும் தட்டுப்பாடின்றி வழங்க வலி யுறுத்தி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி- பூக்கொல்லை சாலையில் உள்ள ரேசன் கடை முன்பு மாதர் சங்கத்தின் நகரக் குழு சார்பாக செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் நகரத் தலைவர் எஸ்.சகாயராணி தலைமை வகித்தார்.  மாவட்ட பொருளாளர் ஆர்.சுமதி கண்டன உரையாற்றினார். செயலாளர் வி.ஜெயந்தி மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் தட்டுப்பா டின்றி வழங்கிட வேண்டும். மண்ணெண் ணெய் ரேசன் கார்டுக்கு 2 லிட்டர் வீதம்  வழங்க வேண்டும். ரேசன் கார்டுக்கு வழங்கப் படும் அரிசியில் பிடித்தம் செய்யாமல் 5  கிலோ கோதுமை வழங்க வேண்டும். ரேசன்  பொருட்களை தரமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.