districts

img

நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், டிச.6 -  சாலைப் பணியாளர்களின் 41 மாத  பணிநீக்க காலத்தை பணிக் காலமாக  முறைப்படுத்தக் கோரி தமிழ்நாடு நெடுஞ் சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களில் இறந்தோரின் வாரிசுகளுக்கு கருணை  அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.  தகுதியானவர்களுக்கு மட்டுமே  சாலைப்பணியாளர் பணி நியமனத்தை  கோட்டப் பொறியாளர்கள் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் ஏற்பட்டுள்ள தொழிற்சங்க விரோதப் போக்கை உயர் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே  செவ்வாய்க்கிழமை மாலை நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத் தலைவர் டி.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்  தலைவர் சிவ.ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். சங்கத்தின் கோட்டச் செயலா ளர் பி.சந்திரசேகரன் கோரிக்கை விளக்க வுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநி லச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி, மாவட்டச் செயலாளர் ஏ.ரெங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கரூர்  கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்  மாவட்டத் தலைவர் கே.செவந்திலிங்கம்  தலைமை வகித்தார். மாவட்டப் பொரு ளாளர் ஆர்.சிவக்குமார் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மு.செல்வராணி, மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழ கன், நெடுஞ்சாலைத்துறை சாலை பணி யாளர் சங்க மாவட்டச் செயலாளர் எல். பாலசுப்பிரமணி ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.