மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் பாஜக அரசைக் கண்டித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.சிம்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, நகர் செயலாளர் ஏ.ஆர்.விஜய், திராவிடர் விடுதலை கழக மாவட்டச் செயலாளர் மகேஷ், சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.