districts

img

இபிஎப் ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க கோரிக்கை

கும்பகோணம், டிச.20 - வருங்கால வைப்பு நிதியை பாதுகாக்க வும், இபிஎப் 95 ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் பஞ்சப் படியு டன் வழங்க வேண்டும். இஎஸ்ஐ திட்டத்தின்  மூலம் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். 2014 செப்டம்பர் 1-க்கு முன்பு, பின்பு என்று  பாகுபாடு இல்லாமல் தகுதியுள்ள அனைவ ருக்கும் முழு சம்பளத்திற்கான ஓய்வூதி யத்தை உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்ப டையில் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதியை பங்கு மார்க் கெட் சூதாட்டத்தில் முதலீடு செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கூட்டுறவு இபிஎப் ஓய்வூதி யம் பெறுவோர் நலச்சங்கம் சார்பில் புத னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வருங் கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு நடை பெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர்  ஆர்.சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் வாசுதேவன், துணைச்  செயலாளர் சொக்கலிங்கம், ராஜேந்திரன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர்  சங்க மாவட்ட துணைத் தலைவர் பழ.அன்பு மணி, வட்ட செயலாளர் உதயகுமார் ஆகி யோர் ஆதரவு உரையாற்றினர்.