யிருந்த மழைநீரும் வடிந்துவிட்டது. மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மருந்துகள் அடித்தும் உரமிட்டும் பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். அதே போல் நேரடி விதைப்பு செய்யப்பட்டிருந்த விளைநிலங்களில் களையெடுக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர் கனமழையின் காரணமாக டெல்டா மாவட்டம் முழுவ துமே சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதால் அனைத்து பகுதிகளிலும் மருந்துகள் அடிப்பதும், உரமிடும் பணி களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேவையான அளவு உரங்கள் கிடைப் பதில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா தாளடி சாகுபடி தீவிரமாக நடந்து வரும் நிலையில், கடந்த மாத கன மழையில் அழுகிய பயிர்களுக்கு மாற்றாக தாளடி சாகு படியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தற்போது 80 நாட்களை கடந்த சம்பா பயிர்கள் தண்டு ருண்டு சூழ் கட்டி வரும் நிலையில், கூடுதல் மகசூலுக்கு உரம் இட வேண்டியது மிக அவசியமாகிறது. ஆனால் ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் இடு உரத்திற்கு தட்டுப்பாடு தொடர்கிறது. தனியார் கடைகளில் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. இப்போதைய சூழலில் பயிர்களுக்கு தழைச்சத்து, மணிசத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்று சத்துக்களும் தேவைப்படுகிறது. இதில் முதல் இரண்டு சத்துக்களுக்கும் அடியுரம் மேலு ரமாக அளிக்கப்படும் நிலையில், நடவிற்கு பிறகு சாம்பல் சத்து அவசியம் அளிக்க வேண்டியுள்ளது. பயிர் தட்டை தோகைகள் உறுதியாக நெல் மணிகள் வளைந்துவிடா மல் நிற்கவும் உரமிடுகையில் பயிரும் வளர்ந்து மகசூ லும் அதிகமாக கிடைக்கும்.
இதையடுத்து பொட்டாஷ் கிடைக்காமல் விவசாயி கள் அலைந்துகொண்டுள்ளனர். ஏற்கனவே இருந்த நிலை யைவிட தற்போது டெல்டா மாவட்டத்தில் உரத்தட்டுப் பாடு அதிகமாகி உள்ளது. குறிப்பாக வேளாண் துறை பரிந்துரைக்கும் நுண்ணுயிர் வழங்கும் கலப்பு உரத்தால் பயனில்லை. டிஏபி உரமும் கிடைக்காத நிலையில், பொட்டாஷ் உரம் மூட்டை ரூ.1800 ஆக உயர்ந்துவிட்டது. தற்போதைக்கு பயிருக்கு உரம் கொடுக்காவிடில் கதிரில் பதர்கள் அதிகமாகி மகசூல் பாதிக்கு பாதியாக குறையும் ஆபத்து உள்ளது. டெல்டா விவசாயிகளுக்கு உரம் சப்ளை செய்ய வேண்டிய டிசிஎம்எப் கிடங்கில் எந்த உரமும் இருப்பில் இல்லை என்று தகவல்கள் வருகிறது. விவசாயத் தேவைக்கு ஆந்திராவிலிருந்து இப்கோவும், கேரளாவிலிருந்து பாக்ட் நிறுவனம் வாயிலாகவும் உரங்கள் வருகின்றன. இஸ்ரேலிலிருந்து பொட்டாஷ் இறக்குமதி செய்யப் படுகிறது. உரம் வரத்து குறைந்துள்ள நிலையில், பொட்டாஷ் டிஏபி-க்கு பதிலாக யூரியா உரத்தை இரண்டு -மூன்று தடவையாக தெளித்து பயிரைக் காக்கலாம் என்றால் யூரியாவும் கிடைப்பதில் பெரும் சிரமம் உள்ளது.
இதன் விளைவாக நடப்பாண்டு மகசூலில் 50 சதவீதம் பாதிக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 1000 டன் உரம் இருப்பு பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் உரத் தேவைக்கு உயரதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள் ளது என்று வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வரும் ஒரு சில வாரங்களில் மேலும் 1000 டன் உரம் இருப்பு பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அதி காரிகள் கூறுகின்றனர். இந்நிலையில் தமிழகத்திலுள்ள 4356 கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக உரங்கள் விநியோகிக்கப்படுகிறது என்றும் இந்த வார இறுதிக்குள் கூட்டுறவு சங்கங்களில் பொட்டாஷ் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் கூட்டுறவு அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இன்னும் 10 நாட்களுக்குள் உரத் தட்டுப்பாட்டை போக்கினால்தான் மேலும் மகசூல் இழப்பு ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
- ஆரூரான்