districts

img

தனிநபர்களின் ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சிபிஎம் குடியேறும் போராட்டம்

கரூர்.டிச.13- கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூ ராட்சிக்குட்பட்ட ஐந்து மற்றும் ஆறாவது வார்டில் உள்ள மஞ்சமேடு மணி நகரில் மக்கள் சென்று வரும்  பாதையில்  சுற்றுச்சுவர் கட்டி  தனிநபர்  ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்தும், ஆக்கிரமிப்புகளை  அகற்றி பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழு சார்பில் 11 1.2022 அன்று கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தை  தொடர்ந்து  குளித்தலை அன்றைய கோட்டாட்சியர் புஷ்பா தேவி பாதையை மீட்டுக் கொடுத்தார். மேலும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு சாலை அமைத்துக் கொடுக்கவும் உத்தரவிட்டார். ஆனால் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம் சாலை அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. தற்போது மீண்டும் அந்த பாதையில் சுற்றுச்சுவர் அமைத்து பாதை யின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமின்றி, அத்துக்கல்  நடப்பட்டிருந்த தையும் அகற்றிவிட்டனர். ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்தும், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, 15 அடி நிரந்தர சாலை அமைத்து கொடுக்க வேண்டும். மணி நகர் மக்களுக்கு எதிராக செயல்படும் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்,  பேரூராட்சி அலு வலகத்தில் டிசம்பர் 13 அன்று  குடியேறும் போராட்டம் நடைபெறும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணாபுரம் ஒன்றிய குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து டிசம்பர் 12 அன்று கிருஷ்ணாபுரம் வட்டாட்சியர் தலைமையில்  பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் சாலை அமைத்துக் கொடுப்பதற்கான எவ்வித உறுதியும் அளிக்கவில்லை.  இதனைத்தொடர்ந்து டிசம்பர்  13 அன்று கிருஷ்ணாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில்   குடியேறும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக மணி நகரிலிருந்து கிருஷ்ண ராயபுரம் பேரூராட்சி அலுவலகம் வரை பேரணியாக வந்து சாலையில் அமர்ந்து சமை யல் பாத்திரங்கள், விறகு, அடுப்புகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்தனர்.  காத்திருப்பு போராட்டத்திற்கு கட்சியின் மணி நகர் கிளைச் செயலாளர் பாலசுப்பிர மணியன் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் மா.ஜோதி பாசு உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முத்துச் செல்வன், ஒன்றிய செயலாளர் ஜி.தர்ம லிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கண்ணதாசன், நாகராஜன், சுப்பிரமணியன், பார்த்திபன் உட்பட, நூற்றுக்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர். 

மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

இதுகுறித்து கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர்  மா.ஜோதிபாசு கூறுகையில், தொடர்ந்து கிருஷ்ணாபுரம் பேரூராட்சி நிர்வாகம் 5 மற்றும் 6 ஆவது வார்டு கவுன் சிலர்கள் மணி நகர் மக்களுக்கு எதிராக வும் அவர்களை பழிவாங்கும் நோக்கத் தோடும் அவர்களின் நியாயமான கோரிக் கையை புறக்கணித்து தனி நபர்களுக்கு துணை போகும் செயலை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த செயல்பாட்டை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு வன்மையாக கண்டிப்பதோடு,  தமிழக அரசு நிர்வாகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் செயல்படும் ஐந்து மற்றும் ஆறாவது வார்டு கவுன்சிலர்கள் மீதும், கிருஷ்ணாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து உடனடியாக மணி நகர் மக்க ளுக்கு நிரந்தரமான சாலை அமைத்து கொடுக்க கரூர் மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணி நகரில் உள்ள மக்க ளுக்கும், அவர்களது உடைமைகளுக்கும்   கரூர் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு வழங்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு சார்பில் மாவட்டம் முழு வதும் இந்த போராட்டத்தை விரிவுபடுத்தி தொடர் போராட்டமாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.