திருச்சிராப்பள்ளி, பிப்.13 - 37 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்க ளுக்கு வீட்டு மனைப் பட்டாவை உடனே வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத் திற்குட்பட்ட நவல்பட்டு, அண்ணாநகர் பகுதி யில் கடந்த 37 ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகள் மற்றும் மனைகளுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும். இப்பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப் பதிவை உடனடியாக தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் சாலை யில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிபிஎம் அண்ணாநகர் கிளை செயலாளர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி திரு வெறும்பூர் தாலுகா செயலாளர் மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினர் தெய்வநீதி, தாலுகா குழு உறுப்பினர் யமுனாதேவி, பிரபாகரன் ஆகியோர் பேசினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் வட்டாட்சியர் ஜெயபிரகாசம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் பிப்.20 ஆம் தேதிக்குள் பத்திரப்பதிவு தொடர்புடைய அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட் டத்தை கைவிட்டனர்.