நாகர்கோவில், ஆக 23
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வா தார இயக்கம் சார்பில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மகளிர் சுய உதவி குழுவி னரின் பொருட்கள் விற்பனை செய்யும் கல்லூரிச் சந்தை நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் முனை வர் டி.ஹென்றி ராஜா தொடங்கி வைத்தார்.
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் சணல் பொருட் கள், செயற்கை ஆபரணங் கள், துணி வகைகள், இயற்கை உணவுகள் மற்றும் இதர பொருட்களின் சந்தைப் படுத்துதலை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்ட செயலாக்க அலகு மூலம் தேசிய, மாநில, மாவட்ட அளவில் கண்காட்சிகள், கல்லூரி சந்தைகள் நடத்தப் பட்டு வருகின்றன.
இதில் சிறுதானிய உண வுகள், ஜெல்லி மிட்டாய், தரை விரிப்புகள், கீ செயின், பனை ஓலைப்பொருட்கள், மற்றும் பட்டு உடைகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்கள் கண் ்காட்சியில் வைக்கப் பட்டுள்ளன. ரூ.10 முதல் ரூ.2000 வரையிலான பொ ருட்களை கல்லூரி மாணவி கள் ஆர்வத்துடன் பார்வை யிட்டு வாங்கிச் சென்றனர்.