திருவாரூர், மே 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் போழக்குடி கிரா மத்தில் வசித்த முன்னாள் ஒன்றியச் செயலாளர் நடராஜ னின் துணைவியார் தியாகமணி கடந்த சில வாரங் களுக்கு முன்பு காலமானார். மறைந்த தியாகமணியின் படத்திறப்பு திங்கள் கிழமை போழக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. படத்திறப்புக்கு கட்சியின் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தோழர் தியாக மணியின் உருவப்படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றினார். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உது மான், குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.ரவிச் சந்திரன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.ராம மூர்த்தி, கிளைச் செயலாளர் இளவரசன் மற்றும் வர்க்க வெகுஜன அரங்கத்தினர் கலந்து கொண்டனர்.