மயிலாடுதுறை, டிச.14 - இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய தொழிற்சங்க தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலை வர்களில் ஒருவருமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம் வெள்ளி யன்று கடைப்பிடிக்கப்படு கிறது. இதை முன்னிட்டு மயி லாடுதுறை மாவட்டம் கொள் ளிடம், குத்தாலம் பகுதி களில் வியாழனன்று பேர வைக் கூட்டங்கள் நடை பெற்றன. சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்கள் இணைந்து புத்தூர் மதகடியில் நடந்த பேரவைக்கு ஒன்றியச் செய லாளர்கள் கே.அசோகன், கே.கேசவன் ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ப.மாரி யப்பன், டி.சிம்சன் ஆகி யோர் உரையாற்றினர். குத்தாலத்தில் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் சி.விஜயகாந்த் தலைமை யில் நடைபெற்ற பேரவை யில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரை ராஜ், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் வைரவன், ராமகுரு ஆகியோர் விளக்கவுரை யாற்றினர். இரு இடங்களிலும் நடை பெற்ற சிறப்பு பேரவைக் கூட்டத்தில் மாவட்ட செயற் குழு, மாவட்டக் குழு, ஒன்றி யக் குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், வர்க்க, வெகுஜன அரங்கங் களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.