districts

img

தோழர் இலக்குமணன் படத்திறப்பு

திருவாரூர், ஜூலை 23-  

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், திட்டாணிமுட்டம்-ஆலத்தாங்குடி யைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் ஆர்.இலக்குமணன் படத்திறப்பு அவரது இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்பு சாமி தலைமை வகித்தார். சிபிஎம் கீழ்வேளூர்  சட்டமன்ற உறுப்பினரும், மாநிலக் குழு உறுப்பினருமான வி.பி. நாகைமாலி தோழர்  இலக்குமணன் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றினார். முன்னதாக மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக்  குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகை யன் ஆகியோர் உரையாற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர் என்.காமராஜ் நன்றி கூறி னார்.