அரியலூர், ஆக. 18-
பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச் சங்கம், தமிழ்நாடு அரசு கிராமப் பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ப.எஸ்தர் ராஜகுமாரி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி கோமதி கோரிக்கை கள் குறித்து உரையாற்றினார்.
கிராமப் பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு கூடுதலாக கணினி பதிவேற்றாளர் பணியை வழங்கக் கூடாது. அனைத்து தரப்பு மக்களுக் கும் தரமான சுகாதார சேவை உடனடி யாக கிடைத்திட கிராம, பகுதி, சமுதாய செவிலியர்களை தாய்-சேய் நலம், நல வாழ்வு பணிகளை செய்யவிட வேண் டும்.
ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தலா ஒரு வீதம் டிஇஓ-க்களை (மாவட்ட டேட்டா எண்ட்ரி அலுவலர்) பணி யமர்த்திட வேண்டும். திட்டப் பணிகள் தொடங்கும் முன்பு தொடர்புடைய சங்கங்களை அழைத்து கருத்துக் கேட்க வேண்டும். நியாய விலைக் கடையில் பதிவேற்றம் செய்ய வேண்டிய பணியை கிராம சுகாதார செவிலியர் மீது திணிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.