districts

img

பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் வீடு கட்டுவது குறித்து ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், மே 5- தாராபுரம் அருகே உள்ள சி.அம்மாபட்டியில் பழங்குடி யினர் வசிக்கும் பகுதியில்  பழங்குடியினர் மேம்பாட் டுத் திட்டத்தின் கீழ் வீடு கட் டுவதற்கான முன்னேற் பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சி.அம்மா பட்டியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான முன்னேற் பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அவர் கூறுகையில், சி. அம்மாபட்டி பழங்குடியினர் வசிக்கும் பகுதியில், பழங்குடி யினர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட் டில் 31 வீடுகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. அதனைத்தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிகள், இட வசதிகள், பாதை வசதிகள், குடிநீர், மின்சா ரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. மேலும், வீடுகள் கட்டும் பணிகளை விரைவாக வும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு  வர வேண்டுமென சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். இந்த ஆய்வின் போது தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட் டாட்சியர் ஜெகஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவ குருநாதன், எத்திராஜ், உதவி பொறியாளர் சசிகுமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.