குழந்தைகள் மருத்துவ முகாம்
பாபநாசம், ஜூலை 14 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி கிளப், சூர்யா ராகவி மெடிக்கல் இணைந்து குழந்தைகள் இலவச மருத்துவ முகாமை நடத் தின. அரசு மருத்துவர் தீபலஷ்மண் பரிசோ தனை மேற்கொண்டு, ஆலோசனை வழங்கி னார். இதில் குழந்தை களின் எடை, வெப்ப நிலை, இரத்த சோகை பரிசோதிக்கப்பட்டது. ரோட்டரி கிளப் தலைவர் சக்திவேல், செயலர் ரவிச் சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
தஞ்சாவூர், ஜூலை 14- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள அம்மணி சத்திரத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணையில் மரக்கா வலசை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (42) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல சனிக் கிழமை காலை மோட்டார் அறையில் இயந்திரங் களை இயக்கிக் கொண்டி ருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ஜோதி, சேது பாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய் தார். இதன்பேரில் சட லத்தை மீட்டு உடற்கூறாய் வுக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
சிறப்பு மருத்துவ முகாம்
தஞ்சாவூர், ஜூலை 14- தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக மருத்து வர் அணி சார்பில், முத்தமிழ் அறிஞர் கலை ஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, பட்டுக் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத் துவ முகாம் ஞாயிறன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பட்டுக் கோட்டை நகர் மன்றத் தலைவர் சண்முகப் பிரியா செந்தில் குமார் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை முகா மைத் துவக்கி வைத்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார், தஞ்சை மாநக ராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர் கேன்சர் மருத்துவமனை, தஞ்சா வூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, பட்டுக்கோட்டை கன கேசத் தேவர் நினைவு மருத்துவமனை, நாடி மருத்துவமனை, திரா விடன் மருத்துவமனை யைச் சேர்ந்த பல்வேறு துறை சிறப்பு மருத்து வர்கள் கலந்து கொண்டு 1,258 பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மருந்து-மாத்தி ரைகளை வழங்கினர்.
தனியார் மருத்துவமனையில் ரூ.1.50 கோடி முறைகேடு: ஊழியர் கைது
தஞ்சாவூர், ஜூலை 14 - தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையில் ரூ.1.50 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியரை காவல்துறையினர் சனிக் கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூர் வ.உ.சி. நகரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மனித வளப் பிரிவு மேலாளராக மதுரை மாவட்டம் அழகர் கோயில் சாலை சுந்தரராஜன்பட்டியைச் சேர்ந்த ஜோக்லு ராஜ்குமார் (36) என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.
இவர் மருத்துவமனையில் பயிற்சிக்கு வரும் செவிலி யர்களிடம் மாதந்தோறும் பணம் வசூலித்தது, மருத்துவ மனையின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியது, மருத்துவ மனைக்கு உபகரணங்கள் வாங்கியது, பயிற்சி பெறும் பணி யாளர்களுக்கு கேண்டீனில் உணவுக்காக வழங்க வேண்டிய பணத்தை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு வகை களில் மருத்துவமனையின் பணத்தை எடுத்து அதனை அவர்களுக்கு கொடுத்தது போல் போலி ஆவணங்கள் தயா ரித்து முறைகேடு செய்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூலை 10 ஆம் தேதி வரை இந்த முறைகேட்டால் மருத்துவமனைக்கு ரூ.1.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் சர வணன், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த ஜோக்லு ராஜ்குமாரை சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களைத் தேடி மருத்துவப் பணியாளர்கள் சங்க பேரவை
திருச்சிராப்பள்ளி, ஜூலை 14- சிஐடியு மக்களை தேடி மருத்துவ பணியாளர்களின் திருச்சி மாவட்ட சிறப்பு பேரவை சிஐடியு மாவட்ட அலுவ லகத்தில் ஞாயிறன்று நடந்தது.
சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். மாநில பொறுப்பாளர் பெரம்பலூர் செல்வி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், வள்ளி, கெளசல்யா லோகேஸ்வரி, சுகன்யா ஆகியோர் பேசினர்.
திருச்சி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோர் வீடு, வீடாகச் சென்று மருத்துவப் பணி செய்து வருகின்ற னர். திட்ட பணியாளர்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என வேலைக்கு அமர்த்தப்பட்டார் கள். ஆனால், இரவு-பகல் பாராமல் 24 மணி நேரமும் வேலை வாங்குகிறார்கள்.
மருத்துவமனைகளில் ஓ.பி. சீட்டு வழங்குவது உட்பட அனைத்து பணிகளையும் செய்தாலும், ரூ.5000 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. அதுவும் முறையாக வழங்கப்படு வதில்லை. எனவே மக்களை தேடி மருத்துவப் பணியா ளர்களுக்கு அடிப்படை சம்பளம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 30 அன்று சென்னையில் தேனாம் பேட்டை டி.எம்.எஸ்.எஸ் வளாகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெறுகிறது. இதில் 300 பேர் கலந்து கொள்வது. போராட்ட தயாரிப்பிற்கான மாநில அளவிலான கூட்டத்தை திருச்சியில் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.
தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை
துரை.வைகோ எம்.பி., பேட்டி
புதுக்கோட்டை, ஜூலை 14- தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்றார் திருச்சி மக்களவை உறுப்பினர் துரை.வைகோ.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தின் முதல் கன்னிப் பேச்சில் வலியுறுத்தினேன். கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வரு கிறார். இத்திட்டத்தால் 5 மாவட்டங்கள் பயன்பெறும்.
மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, குண்டாறு ஆகியவற்றை இணைக்கும் தென்னிந்திய நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதுதான் முழுமையான திட்டம். இதனை நிறைவேற்றினால் 5 மாநிலங் கள் பயன்பெறும். தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இட மில்லை. இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், அதிமுகவின் வாக்குகளும் திமுகவுக்குத்தான் கிடைத்துள்ளன” என்றார்.
புதுக்கோட்டையில்
தமுஎகச பொன்விழா கொண்டாட்டங்கள்
புதுக்கோட்டை, ஜூலை 14 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் சங்கத்தின் பொன் விழா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடை பெற்றன.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தொடங்கி 50 ஆவது ஆண்டு தொடக்கத்தை முன்வைத்து ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, மழையூர், வடகாடு, மணமேல்குடி, சிலட்டூர் ஆகிய இடங்க ளில் கிளை உறுப்பினர்கள் கூடி அமைப்பு உருவான தினத்தை கொண்டாடினர்.
இக்கூட்டங்களில் தமுஎகச மாநில துணைத் தலைவர் ஆர்.நீலா, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஸ்டாலின் சர வணன், மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜீவி, இரா.தனிக்கொடி, மருத்துவர் நா. ஜெயராமன், மாவட்ட நிர்வாகிகள் ரமா ராமநாதன், வெள்ளைச் சாமி, உஷா நந்தினி உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.