districts

img

குருதிக் கொடையாளர்களுக்கு சான்றிதழ்

திருவாரூர், அக்.6 - தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு, 2023 ஆம் ஆண்டின் அரசு ரத்ததான முகாமில் தொ டர்ந்து ரத்ததானம் வழங்கிய சமூக சேவகர்களை, தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் பாராட்டி சான்றிதழ் வழங்கியது. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எஸ்டிபிஐ கட்சியின் குடவாசல் நகரத் தலைவரும், ரத்த தான கொடையாளர் முபாரக்-ஐ பாராட்டி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் சான்றிதழும் கேடயமும் வழங்கி னார். குடவாசல் நகரச் செயலாளர் ரஜின் அகமது, அபிவிருத்தீஸ்வரம் கிளை ஹசன் மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் ஹசன் குத்தூஸ் ஆகி யோர் கலந்து கொண்டனர்.