மயிலாடுதுறை, ஏப்.24 - மயிலாடுதுறை மாவட்டம், பொறை யார் த.பே.மா.லு கல்லூரியின் 52 ஆவது கல்லூரி விழா முதல்வர் ஜான்சன் ஜெயக் குமார் தலைமையில் நடைபெற்றது. துணை முதல்வர் பியூலா தங்கராஜ் வரவேற்று உரை யாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக தனியார் தொலைக்காட்சி கலைஞர் ஈரோடு மகேஷ் பங்கேற்று ‘வெற்றி வெகு தூரமில்லை’ என்ற தலைப்பில் உரையாற்றினார். பொறையார் பெத்லேகம் ஆலய ஆயர் ஜான்சன் மான்சிங், கல்லூரி காசாளர் ஜூலியஸ் விஜயக்குமார் மற்றும் கல்லூரியின் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவ லர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர்.