districts

img

திண்டுக்கல் சிறுமலையில் மத்திய பயிர் பாதுகாப்பு மைய அதிகாரிகள் ஆய்வு

சாறு உறிஞ்சும் பூச்சிகளால் சௌசௌ விவசாயம் பாதிப்பு

திண்டுக்கல், ஜுலை 7- திண்டுக்கல் சிறுமலையில் சௌசௌ கொடியில் மஞ்சள் நோய் மற்றும் வெள்  ளைப்புழு தாக்குதல் காரணமாக விவசாயி கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.இது தொடர்பாக தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளி யானது. இதனையடுத்து மத்திய ஒருங்கி ணைந்த பயிர் பாதுகாப்பு மைய அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டனர்.  திண்டுக்கல் சிறுமலையில் புதூர், பழை யூர், தாளக்கடை. கடம்பனூர், பொன்னூ றுக்கி உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மலை மக்கள்  வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான  தொழில் விவசாயமே ஆகும். இந்த மலை யில் புகழ்பெற்ற பலா, வாழை மற்றும்  காப்பி, மிளகு பணப்பயிராக விவசாயம்  செய்யப்படுகிறது. இந்த பயிர்கள் 6 மாதத் திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒரு  முறை பலன் தரக்கூடியதாக உள்ளது. ஆனால் தற்போது அன்றாடம் பலன் தரக்  கூடிய தோட்ட காய்கறி பயிர்களான சௌ சௌ, அவரை, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. இந்த காய்கறி தோட்டப்பயிர்களை தற்போது 5 ஆயிரம்  ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டு வருகிறார் கள். அன்றாடம் சௌசௌ, பீன்ஸ், அவரை  ஆகிய பயிர்களை திண்டுக்கல் மார்க்கெட் டிற்கு கொண்டு சென்று விற்று பயனடை கிறார்கள். இதில் பிரதானமாக சௌசௌ கொடி மூலம் சிறுமலை விவசாயிகள் அதிக  லாபம் அடைந்து வருகிறார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த சௌசௌ காய் மக்களால் விரும்பி வாங்கப்படுகின்றன. சிறு மலையில் விளையும் சௌசௌ காய் ஒரு  காய் 150 கிராம் முதல் 250 கிராம் வரை எடை  கொண்டதாகவும் மிகவும் பளபளப்பாக மிளி ரும் தன்மை கொண்டதாகவும், சுவையாக வும் இருக்கும். அதனால் இந்த சௌசௌ காயை அப்படியே பேரிக்காய் போல சாப்பி டலாம். இந்த சௌசௌ காயை வாங்கு வதற்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து வியா பாரிகள் சிறுமலைக்கு வந்து கொள்முதல் செய்கிறார்கள்.  இப்பகுதியில் சுமார் 500 முதல் 2000  ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சௌசௌ கொடி களில் மஞ்சள் நோய் மற்றும் வெள்ளை புழு தாக்குதலால் பந்தலிலேயே பூக்கள் பூத்து காய்கள் பருவத்துக்கு வரும் பொழுது அவற்றின் தன்மைகள் குறைந்து காய்கள் சுருங்கி கத்திரிக்காயின் உருவத்தை போல் மாறிவிடுகிறது. இதனால் சௌசௌவை சந்தைப்படுத்த முடியாமல் பந்தலிலேயே தொங்கி பயனற்ற தன்மைக்கு மாறி விடு கிறது. ஏக்கர் ஒன்றுக்கு 4 லட்சம் வரை  செலவிட்டும் உரம் வைத்தும், பூச்சி மருந்து கள் அடித்தும் மஞ்சள் நோய் மற்றும் வெள்ளை புழுக்கள் நோய் தாக்குதலில் இருந்து இந்த விவசாயத்தை எங்களால் காப்பாற்ற முடியவில்லை என்று விவசாயி கள் வேதனைப்படுகிறார்கள். கொடைக்கா னல், ஆடலூர் , தாண்டிக்குடி, பன்றிமலை உள்ளிட்ட இந்த மாவட்டத்திலேயே உள்ள மலைப்பிரதேசங்களில் விளையக்கூடிய இந்த சௌசௌ இந்த வினோத நோயால் தாக்கப்படாமல் உள்ளது ஆனால் சிறுமலை யில் மட்டும் இந்த நோய் தாக்குதலால் பெரும்  பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே வேளாண்மை துறையும் தோட்டக்கலை துறையினரும் பகுதியை கள ஆய்வு நடத்திட வேண்டும் இந்த புது விதமான நோயிலி ருந்து விவசாயத்தை காத்திட முறையான மருந்துகளை எங்களுக்கு கொடுத்து இந்த  விவசாயத்தை காத்திட வேண்டும் என்று இப்  பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.  இதுகுறித்து செய்தி தீக்கதிர் நாளிதழில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுடிச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைமை அலுவலகமாக திருச்சியில் உள்ள  மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மைய அலுவலக அதிகாரிகள் இந்த நோய் பாதிப்பு குறித்து ஆய்று செய்ய சிறுமலை வந்திருந்தனர். துணை இயக்குநர் சிவ ராமன் உத்தரவின் பேரில் பயிர் பாது காப்பு. அலுவலர் டாக்டர் கோவிந்த ராமன்,  உதவி பயிர் பாதுகாப்பு அலுவலர் சிவக் குமார், சயின்டிபிக் ரிச்சஸ்ட் அல்ட்ரா அஹ மத், சுருளிராஜன், தோட்டக்கலை துறை  ராமநாதன் ஆகியோர் சிறுமலை வனப்பகுதி யில் சௌசௌ செடிகளுக்கு மஞ்சள் நோய்  தாக்குதல் மற்றும் வெள்ளை புழு தாக்கு தல் பற்றி மண் பரிசோதனை, சௌசௌ, சௌசௌவின் பாதிக்கப்பட்ட இலைகள் ஆகியவைகளை ஆய்வு செய்தனர்.  ஆய்வு மேற்கொண்ட பயிர் பாதுகாப்பு  அலுவலர் கோவிந்தராமன் கூறுகையில், சிறு மலை வனப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 2, 500 ஏக்கருக்கு மேலாக மஞ்சள் நோய் தாக்கு தல் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நோய் சாறு உறிஞ்சும் பூச்சிகளால் உருவாகிறது. சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுகப்படுத்த வேண்டும் என்றால் பூச்சிகளை கவரும் வித மாக பொறிகள் வைக்க வேண்டும். ஏக்க ருக்கு 5 முதல் 6 வரை அந்த பொறிகளை வைத்து கண்காணிக்க வேண்டும். வெள்  ளைப்பூக்களை பூச்சி மருந்துகள் மூலம்  நாம் கட்டுப்படுத்தலாம். எனவே ஒருங்கி ணைந்த பயிர் பாதுகாப்பு முறையை விவ சாயிகள் பின்பற்ற வேண்டும். இந்த போகத்  தில் நோய் தாக்குதல் அதிகம் உள்ளதால் இப்போது நோயை கட்டுப்படுத்த முடியாது.  சௌசௌ பயிர் நடவு செய்யும் போதே  தரமான விதை, மண் பரிசோதனை, விதை  நேர்த்தி, மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி இவைகளை கையாண்டு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் பயிரிடப்படும் பயிர்களை ஆரம்பக் காலத்திலிருந்து இதை  நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரி வித்தார். (நநி)